பக்கம்:அந்தித் தாமரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


இரண்டாவது கடிதம் :

‘அன்புள்ள கல்யாணி,

பல பல வருஷங்கள் மறைந்து, என்னுடைய இக் கடிதத்தைக் காணும் நீ அதிசயப்படுவாய், ஆத்திரப் படுவாய். இல்லையென்றல், உன் மகள் நளினவும் என் மகன் சேகரனும் தம்பதிகளாவதைத் தடுத்திருப்பாயா கீ ? நான் உன்னே வஞ்சிக்கவில்லை. விதி நம் இருவரை யும் வஞ்சித்துவிட்டது. என் ஜாதகத்தைப் பார்த்தவர் எனக்கு தாரதோஷம் இருப்பதாகப் பயமுறுத்திர்ை. உன்னைக் கரம் பற்றி அதன் விளைவால் உன்னே நான் இழக்கத் துணியவில்லை. அன்றுபோல என்றென்றுமே நீ என் கனவுப் பதுமையாக நிலவவே கான் ஆசைப் பட்டேன். உலகின் எங்கோ ஒர் மூலையில் நீ உயிருடன் இருந்தால் என்றாகிலும் ஒர் நாள் காணலாமல்லவா? என் உடலின் உயிர்ப்பே நீயல்லவா? உண்மைக் காரணத்தை வெளியிட்டால் அதன் பலன் எந்த வகையில் கம் இரு வரையும் பாதிக்குமோ என்றஞ்சியே நான் உன்னை கிரா கரித்துவிட்டேன் பொதுவாக. எனக்கு வாய்த்தவளும் சேகரனே ஈன்றுவிட்ட மறு கிமிஷம் விதிவழி ஏ.கி விட்டாள். கடைசியில் என் தாரதோஷம் மெய்ய” கிற்று. உன்னைத் துறந்த நினைவு, ள்ன் மனேவியின் பிரிவு எல்லாம் சேர்ந்து என்னைக் கிறுக்களுக்கியது; என் செல்வக் குழந்தையையும் துறந்து கால்போன திக்கில் எங்கும் சுற்றினேன். நேற்றுத்தான் திரும்பி னேன், சேகரன்-களின இருவரின் ஒன்றுபட்ட மனத்தைக் கேள்விப்பட்டு, உன் முகம் காண, உன்னிடம் கதை முழுவதையும் சொல்ல கான் வந்த சமயம்தான் நீ உன் மகளைக் கோபித்துக் கொண்டாப். கல்யாணி குழந்தைகளைப் பிரிக்காதே. நாம் பிரிந்தது போதாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/97&oldid=1273102" இலிருந்து மீள்விக்கப்பட்டது