பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரா. உஷார்!

விருத்து ஆரம்பமாகிறது.

“சாப்பிடலாமா?” என்று கேட்டார் குடும்பத்தின் முதல்வர்.

"ஓ!" என்றவர்கள் பாபுவும் நந்தினியாகவுமே இருக்க வேண்டும்.

“சாப்பிடலாமா, மகேஷ்!"-ரஞ்சனி.

"உம்!"

"ரஞ், சாப்பிடலாமில்லே?”

"ஒ!"

சோற்றுக் கவளங்கள் உருள்கின்றன

"ஊம், சாப்பிடுங்க, ரதி!" என்றாள் வீட்டுக்குத் தலைவி

"சரி!"

முதற்பிடிச் சோற்றுக்கே பாங்கரின் கணக்கில் ஏப்பம் ஒன்று ஆதாயம் ஆகிறது. -

சோற்றைப் பிசைந்தவள். நாணத்தின் மென்மையுடன் சற்றே தயங்கியவாறு தன் காதலர் மகேஷ் சாப்பிட்ட பின்னரே சாப்பிடவேண்டுமென்று காத்திருந்தவள்போன்று. அரைப் பரிவோடும் பிரேம பாசத்தோடும் ஏறிட்டு நோக்கி, “ஹாய், மகேஷ்! உண்ணுங்க வயநேரம் நமக்குச் சோலி உண்டில்ல’ என்று தூண்டினாள் ரதி. கழுத்துச் சங்கிலியின் பதக்கத்தில் ஒற்றைக் கல் வெள்ளை மூக்குத்தி முகம் பார்த்தது: அகமும் பார்த்தாருக்கும்; நெளிநெளியாக அலைபாய்ந்த மயிர்க் கற்றையைத் தளரமுடிந்து தலைவாசிப் பின்னியிருந்த சடைப் பூக்கள் தலைக்காட்டிக் கண்காட்டி, முகமும் காட்டின.

101