முகப்பு மண்டபத்தில் முல்லை மணம் கமழ்ந்தது.
அங்கே:
மகேஷ்--ரதி இணை, இணைந்தும் பிணைந்தும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
“மகேஷ், எழுந்திருங்க; டிஃபன் சாப்பிடுவோம்,” என்றார் ரஞ்சித்.
“ரதியும் வரணும்.” என்றாள் ரஞ்சனி.
“நீங்க ரொம்ப முன்னாடியே ஏந்திருச்சிட்டீங்களா, மகேஷ்?” --- ரஞ்சித் வினவினார்.
“ஆமாங்க, ரஞ்சித்; எழுந்து குளிச்சு, ட்ரஸ் மாற்றிக் கிட்டு நானும் இங்கணே வந்தேன;: சொல்வி வச்சமாதிரி, ரதியும் வந்திட்டா; நாங்க ரெண்டு பேருமே உங்களைத் தேடி அங்கே வரலாம்னு தான் யோசிச்சோம்; ஆனா, நீங்க ரெண்டுபேரும் என்னமோ முக்கியமாய்ப் பேசிக்கிட்டு இருந்தமாதிரி தோணுச்சு; அதுதான், நாங்க இங்கேயே உட்கார்ந்திட்டோம்,” என்று விவரம் சொன்னார் மகேஷ்.
“ஒ. கே!”
முன்னே நடந்த ரஞ்சித்தைப் பின்னே தொடர்ந்தனர் மகேஷூம் ரதியும்.
ரஞ்சனி எப்போதோ உள்ளே போய்விட்டாள்!
ஆமாம்; அதுதான் சிற்றுண்டிக் கூடம்.
சந்தனம் புகைச் சுருள்கள் பின்னமடைந்து விடாமல், சன்னமாக வளைந்தும் நெளிந்தும் பரவிக்கொண்டிருந்தன.
அங்கே, பாபுதான் முதன்முதலில் ஆஜர் கொடுத்திருத்தான். ரவா கேசரி இவனை என்ன பாடு படுத்துகிறது, பாருங்கள்!
121