பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேஷ்!-நந்தினி, பாரதப் பண்பாட்டின் பவித்திரமான குண நலன்கள் நிதானமாய்க் குலுங்கிட, அமைதியாக வந்து அமைதியாக நின்றாள். நல்லகாலம், கம்மிஸ், மாக்ஸி அது இதுவென்று பூச்சாண்டி காட்டவில்லை; அதுவரை ஷேமம்; பாவாடை-தாவணியில் பவித்திரமான அழகு பான்மையுடன் பிரகாசிக்கிறது; நெற்றிக்கும் இட்டுக் கொண்டிருக்கிறாள். நாளை, திங்களன்று 'எகனாமிகஸ்' பரிட்சையாம்; வகுப்பில் நடப்பதுதான்: படித்திருப்பாள்; சாயங்காலம் ஆறு முப்பத்தைந்துக்குத் தொலைக் காட்சி அழைக்கத் தொடங்கிவிட்டால், அப்பால் எந்தப் பட்டணம் எப்படிக் கொள்ளை போனால்கூட, அவளை யாரும் லேசில் அழைத்துவிட முடியாது. சிவாஜியோ, எம்.ஜி.ஆரோ, இல்லை, ஷோபாவோ, ராதிகாவோ, யாரோ இன்னும் கொஞ்ச நாழிகையில் நடிக்கப் போகிறார்கள், வெள்ளிக்கிழமை 'ஒளியும் ஒலி'யில் ஷோபா ஒளி கூட்டி, ஒலி கூட்டியது, மனத்தைத் தொடவில்லையா?-சுசீலாவுக்கென்று அப்படியொரு தெய்வீகக் குரல்! ஒன்று: அந்தக் காலத்திய ஔரங்கசீப் இந்தக் காலத்தில் உயிரும் உடம்புமாக இருந்திருந்தால், அந்த மனிதரும் சுசீலாவின் பாட்டுக்களில் மனத்தைப் பறிகொடுக்காமல் தப்பித்துக் கொள்ளவே முடியாது.

வழக்கப்படி, மகேஷ் தன் அருகில் ரதியை அமர்த்திக் கொண்டார்.

ரஞ்சித் நாகரிகமான மெல்லிய கனைப்புடன் அமர்ந்தார்.

ரஞ்சனி கேசரித் தட்டுடன் வந்தாள்.

உடன், செவகியும் வந்தான்.

"நீயும் உட்கார்ந்து, மத்தியான்னம் மாதிரி, எங்களோடவே டிஃபன் சாப்பிடலாமே, ரஞ்?"

122