“மெய்தான். நீ பச்சைப் பாலகன்தான்: அதனாலே தான், சிவப்புப் பாலகனாகத் தெய்வ அவதாரம் எடுக்க முன்வந்திருக்கே?...ஆமா; தெய்வத்தோட திருவிளையாடலிலே உனக்கு எந்த அவதாரம் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்?...என்னோட பாபு என்கிட்டே ஒளிவுமறைவு இல்லாமச் சொல்லுவானாம்!-தெய்வமாச்சே? மனுஷங்களே அபூர்வமாக மெய் பேசத் துணிகிறப்ப, தெய்வம் பொய் பேசினால், அவதாரம் என்கிற அந்தஸ்துக்கு என்ன தான் மரியாதை இருக்கமுடியும்?--பாபு, நீ என் தெய்வம் மட்டுமில்லே, நீ என் ராஜாவும்தான்! சொல்லு, கண்ணா, சொல்லு!” என்று தவப்புதல்வனின் தாழ்வாயைப் பற்றியவாறு, ஆனால், அவனுடைய இடப்புற மருவைத் தீண்டாதபடி, கெஞ்சினாள் ரஞ்சனி; கொஞ்சியவளும் அதே அசல் ரஞ்சனிதான்!
“சொல்லிப்பிடுவேன்!”
“ம்!”
“சொல்லிப்பிடட்டுமா?”
“ம்!”
“சொல்லிப்பிடுவேன்!”
“ஓ! மேளதாளத்தோட சொல்லிடுடா, பாபு:”
“ஒன்..டூ..”.
“ஊம், த்ரீ!...சொல்லிப்பிடுடா, என் கண்கண்ட தெய்வமே பாபு!”
“ஒ. கே! - த்ரீ! - இதோ, சொல்லிப்பிட்டேன்: எனக்கு...?” .
“உனக்கு?...ம்... டிலே செய்யாமல் சொல்லிடுடா, என் பாபுத் தெய்வமே!”
161