"எனக்குப் பரசுராமர் அவதாரம்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!”
“ஆ!”
அதிர்ச்சி அடைந்த புண்ணியவதி, ரஞ்சனிதான்!-- அதாவது, திருமதி ரஞ்சித்தான்!
தாய் அடைந்த அதிர்ச்சியில், பிள்ளையும் அதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும்.
இன்னமும்கூட, ரஞ்சனி தன்னுடைய மார்பகத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டுதான் இருக்கிறாள்.
“நெஞ்சு வலிக்குதா, அம்மா? நான் தடவிவிடட்டுமா. அம்மா?”
“ஊம்!”
பாலமுதம் பருகித்திளைத்த தாயின் மார்பைப் பாசத்தின் செறிவு சிலிர்த்திடத் தேய்த்துவிட்டான் தடவிவிட்டான். கண் முனைகளில் ஈரம் கசிந்தது. “இப்ப வலி நின்னிடுச்சுதா, அம்மா?”
“ஆமாப்பா, இப்ப வலி நின்னுபோச்சு!”
“அப்படின்னா, திரும்பவும் வலி எடுக்குமா, அம்மா?”
“ஊம்!”
“ஏம்மா அப்படி?”
“அது என்னோட விதி பாபு!”
“நீ என்ன அம்மா சொல்றே? உன் பேச்சே எனக்குப் புரியலையே, அம்மா?”
“என் விதி உனக்கு எப்படிப்பா புரியும்?”
“நீ என்னம்மா சொல்லுறே?”
162