பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“நான் என் விதியைச் சொல்றேண்டா, பாபு:”

“உன் விதின்னா...?”

“என் விதிதான்!”

“நீ என்னத்தையோ எங்கிட்டேயிருந்து மறைக்கிறாயே, தாயே?”

நெருஞ்சி முள் மறுபடி தைத்தது!

துடிக்கிறாள் தாய்.

பாபுவா இப்படிப் பேசுகிறான்?

ஒ!---பாபு தெய்வம் ஆயிற்றே?

ரஞ்சனிக்கு வாய்விட்டு ‘ஓ’வென்று கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. பாபு லேசில் விட்டுவிடுவானா? அவன் மனிதப்பிள்ளை அல்லவே!

“பாபு!”

“பேசு, அம்மா மனசைத் திறந்து பேசு, அம்மா உன் நெஞ்சிலே இருக்கிற கஷ்டத்தை என் கையிலே ஒளிக்காமல் மறைக்காமல் சொல்லிடு, அம்மா! உன்னோட சங்கடம் எதுவானாலும் சரி, அதையெல்லாம் ஒருநொடியிலே நான் தீர்த்துப்பிடுறேன், அம்மா!” .

“மனுசங்களோட கஷ்ட நஷ்டங்களைத் தீர்க்க தெரிஞ்சவன்-தீர்க்க முடிஞ்சவன்தான் ஆண்டவன்!-நீ எனக்குத் தெய்வமாய் வாய்ச்சிருக்கையிலே, நான் ஏன் எதுக்கும் பயப்படப்போறேன்! எதையோ நினைக்கிறேன். மனசு ஏனோ குற்றுயிரும் குலை உயிருமாகத் துடிக்குது!”

“அப்படி எதைத்தான் அம்மா, நினைக்கிறே?”

“அதெல்லாம் உனக்கு இப்ப விளங்காதடா, என் தெய்வமே!”

163