ஆமாம்; பாபு அதிசயமான பிறவி, பிறப்பு; தப்பிப் பிறந்தவன்; தப்பிப் பிழைத்தவனும் அவனே!...
ராகங்களிலே, ஆர்வமான ரகம், ஆவன் அபூர்வ ராகம்!
அப்படியென்றால், வாழ்க்கை எனப்படுவது இசை மன்றம் கணக்குத்தானா?...
ரஞ்சனியின் நினவலைகள் ஆர்ப்பரிக்கின்றன: முகம் வேர்வையில் நகிைறது: ஈரப் பதத்தில், பேசும் விழிகளின் பேசாத கண்ணீரும் சேர்த்தி என்றைக்கும் இல்லாத திருநாளாக, இன்றைக்கென்று காலை முதலே இனகபுரிந்த அச்சமும், இனம் புரியாத ஏக்கமும், வாய்விட்டுச் சொல்ல வொண்ணுத தவிப்பும், மனம் விட்டு அழுது தீர்க்க முடியாத உருக்கமும், மனச்சாட்சி குற்று விரும் குலே உயிருமாகத் துடிதுடித்த அடி நெஞ்சை அடியும் முடிவும் இல்லாமல் அரித்து அரித்துத் தின்று கொண்டிருநத அந்தப் பயங்கர மான-மகாப் பயங்கரமான நரக வேதனையையும் அவள் உள்ளுற உணர்ந்து கொள்ளத் தவறி விடவில்லைதான். என்னவோ இடந்துவிட்டது!...இன்னும் என்னவோ நடக்கப் போகிறது!
காக்கை எங்கேயோ, ஏனோ கரைகிறது.
"ஆத்தாளே, மாங்காட்டு ஆத்தாளே!”
ரஞ்சனி விம்முகிறாள்.
சோதனை இல்லையென்றல், வாழ்க்கை இல்லையா?
சோதனை இல்லையென்றால், தெய்வமே இருந்திருக்காதோ?-இருந்திருக்க இயலாதோ?
“தாயே!”
விம்மல், தொடர் கதை; தொடரும் கதை.
ஆ-12
181