பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித், நாட்டுப் பணிகள் மற்றும் பொதுநலப் பணிகளிலும் அன்போடும் பற்றுதலோடும் அக்கறையுடனும் உண்மையாகவும் விசுவாசமாகவும் ஈடுபட்டிருப்பதால், இத்தகைய பணிமுறைத் தொடர்புகளில் அவ்வப்போது இங்கே வருகை தரும் முக்கியமான அந்நியர்களுக்கு மட்டிலுமே இக்கூடத்தில் விருந்து கொடுப்பார் ரஞ்சித்.

டக்..டிக்.டக்!

ஒமேகா பூஞ்சிட்டுக்கு இதயம் உண்டு; மணி, இரவு ஒன்பது, ஐம்பது.

ரஞ்சித் என்றும் இல்லாத புது நாளாக இப்போது, அந்த விருந்தறையில் மிகத் தீவிரமான சிந்தனைக் கடலில் அகப்பட்டுக்கொண்டு கரையேற வழி தெரியாமல் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தார். அருமை ரஞ்சனி மாத்திரம் பத்து விடிைக்கு முன்னர் ஓடோடி வந்து கதவுகளைத் தட்டியிருக்காமல் போயிருந்தால், அவர் எப்போதோ சாசுவதமாகவே கரை சேர்ந்திருப்பார், வளைகுடா நாடுகளில் விருந்தினர்களுக்குச் சமூக அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் வகையில் வழங்கப்படுகிற ‘கா வா’ எனப்படும் ஏலக்காய்க் காப்பியை ஏலக்காய் வாரியத்தின் செய்முறைக் குறிப்புப்படி தயாரித்துக் கொண்டிருப்பதாக முன்னறிவிப்புச் செய்ய ஒடோடி வந்திருக்கிருள் மகராஜி!- அபாய அறிவிப்பு திசை மாறிவிட்டது!- பழனியப்பா!... காமாட்சி!.

ஊதுவத்தியின் தியாகத்தில் பிறந்த மனம் தெய்வ மணமாகத்தானே இருக்கமுடியும்?

பாங்கருக்கு இப்போது தல்ல மூச்சுத் திரும்பியது, மேய்யாகவே அதிசயம்தான். தன்னுணர்வோடு சுடுநீர்ப் படுதா விரித்த கண்களைத் திறந்தார்.

அதே, வள்ளுவர்;

196