பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னவோ ஒரு குருவி அபசகுனம் பிடித்த முறையில் கத்தியது.

"ரஞ்...ரஞ்!”

இருட்டறையில் உலகம் இருக்கிறதோ?-இல்லை, காதல் இருக்கிறதோ?

ரஞ்சனி அப்போது ஒளிமயமான பள்ளி அறையில் தான் இருந்தாள். “ரஞ் , ரஞ்!-அத்தான் அவசரமாகக் கூப்பிடவே, அவள் அந்த ஏலக்காய்க் காப்பிக் கோப்பையை கைநடுங்க அவசரமாகத் தனியே பிரித்து எடுத்துக் கொண்டாள் !-அவளுக்கு அந்தக் கோப்பை நன்முக அடையாளம் புரியும்:- சற்று முன்னே, என்னவோ ஓசை கேட்டது, இப்போது கேட்கவில்லை; திறந்திருந்த கதவைச் சாத்தக் கூட நினைவின்றி, வேர்வையையும் கண்ணீரையும் துடைத்துக்கொண்டே இடது கைக் கோப்பையை அழுத்தமாகவும் வலது கைக் கோப்பையை மிருதுவாகவும் பிடித்தவாறு, வெளியேறினுள். பாபு: பாபு: அல்லும் பகலும் அவளுக்குப் பாபுவின் ஞாபகம்தான்! பெற்றவளுக்குப் பிள்ளை நினைவு, ஊனும் உயிருமாக ஊடுருவித் துளைத்து, ரத்தத்தின் ரத்தமாகப் பரவிப் பாய்வதுதானே வாழ்க்கையில் பாசத்தின் வரலாறு ஆகிறது. மேனி அல்லாடித் தள்ளாட, அங்கிருந்து வெளியேறுகிருள்: தெய்வத்தைத் தேடி ஓடி வருகிறாள்: முகூர்த்தப் பட்டும், பட்டுச் சரிகைச் சோளியும் இன்னும் கூட, ரஞ்சனிக்கு எவ்வளவு பொருத்தமாகவும் எடுப்பாகவும் அமைந்திருக்கின்றன!

“அ. . . த்!"

"ரஞ்...!”

“இன்னம் பாபு வரல்லீங்களா?" ...

அ-13

197