பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரசுராமருக்கு அழத்தெரியவில்லே!-பாவும்!...

ஊதுவத்தி அற்புதமாகவே மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது!

ஏலக்காய் காப்பிக்கு ஈடு ஏது?

அப்போது:

கீழே, கூக்குரல்:

ஒடினார்கள். “ அய்யோ!... என்டே, பர்த்தான மகேஷ் மறிச்சுப் போயி....!”

ரதி-மகேஷின் ரதி, கூக்குரலிட்டுப் புலம்புகிறாள்: நெற்றிச் சந்தனக் கீற்றும் புலம்புகிறது!..

மகேஷ் இனிமேல் பேசமாட்டார்?—அவருடைய அந்தப் பாழும் கறுப்பு மச்சம்-மரு-வடு எதுவுமே இனிப் பேசாது: பேசவே பேசாது!...

தோழி கலாவோடு நின்றாள் தந்தினி.

ரஞ்சனி, விதியின் தலைவியான ரஞ்சனி தன்னுடைய கூந்தல் பூக்களைப் பிய்த்து வீசி எறிந்தாள்.

“அப்...! பாபு” ஒலம் பரப்பினுன்: கைகள் குவிகின்றன!..

“ரஞ்...என்னோட அருமை ரஞ்!”—விம்மி வெடித்தார் ரஞ்சித்-ரஞ்சனிக்கே உரித்தான ரஞ்சித். காலடியில் தஞ்சமடைந்து கிடந்த அந்த ஜாதி மல்லிகைப் பூக்களை தனக்கே உரிய ரஞ்சனியின் கூந்தலில் மறுபடியும் குட்டினர்.

203