பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவர் என்ன புதிர் போடுகிறார்?

'ஐயையோ-நெருஞ்சி முள், நெஞ்சிலேகூட தைத்து விடுவது உண்டோ?

விடுகதை என்றால், அதற்கு விடை இருக்கத்தான் இருக்கும்.

ரஞ்சித் சொல்கிறார், "பாபு காலம்பற எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் விடுதியிலிருந்து புறப்பட்டு இங்கே வந்திட்றது வழக்கம். மணி பத்தாகப் டோகுது; இப்பத் தான் அவன் அவளோட வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கான்; இல்லியா? இடைப்பட்ட இத்தனை நேரத்துக்கும் அவன் வந்து சேரலேயே என்கிற கவலை நமக்குக் கொஞ்சத்துக்குக் கொஞ்சமானும் இருந்திருந்தால், கடைசிப்பட்சம், ஹாஸ்டல் நம்பருக்குப் ஃபோன் அடிச்சு அவனைக் கூப்பிட்டு, “அவசரக் கூட்டம் நடக்கிறதாலேதான் இத்தனே லேட்: முடிஞ்சதும் வந்திடுவேன்’ என்கிற நடப்பை அவன் வாக்குமூலமாவே கேட்டுக்கிட்டு, நாம நிம்மதியோட தப்பிச்சுக்கவும் முடிஞ்சிருக்கும். இப்ப நாம வகையாய் அவன் கையிலே அகப்பட்டுக்கிட்டோம்!- பாபுவோட குற்றச்சாட்டுக்கு நாம ரெண்டு பேரும் எப்படிப் பொறுப்பு ஆகிறோமோ, அதே விகிதாசாரத்திலேயேதான், அந்தக் குற்றத்துக்கு அவன் கொடுக்கக்கூடிய தண்டனையை ஆளுக்குப் பேர் பாதியாய்ப் பாகம் போட்டுக்கிடவும் பொறுப்பு ஆகவேணும். என்னோட பாதிக் குற்றத்துக்குக் கெஞ்சிக் கூத்தாடி, அவன்கிட்டேயிருந்து மன்னிப்பு வாங்கில் கிட்டேன் நான். உன்னோட பாதித் தப்புக்குப் பரிகாரம் தேடிக்கிடுறது உன்னுேட சாமர்த்தியத்தைப் பொறுத்த சங்கதி; அப்பறம், அம்மா பாடு, பிள்ளை பாடு! என்ன, புரிஞ்சுதா, ரஞ்சனி’ அவர் பிரசங்கம் காரசாரமாகவே அமைந்தது.

52