இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"மகேஷுக்கு” என்று ஒர் அழுத்தமான தொனியில் விடை கூறினாள் ரஞ்சனி.
"மகேஷ-க்கா?” -
“ஆமாம், மகேஷாக்கேதான்!-உன் அன்புமகேஷாக்கேதான்!" என்று ஒரு படி கூடுதலான அழுத்தத்துடன் தெரியப்படுத்தினார் ரஞ்சித்.
இட்டிலியும் கையுமாகவும் மெளனப் பிண்டமாகவும் காட்சியளித்த பாபுவின் இடது கை, அவனது கன்னங்கள் இரண்டையும் தடவிப் பார்த்துக் கொண்டபோது, அவன் கண்கள் தளும்பத் தொடங்கிவிட்டன.
ரஞ்சனிக்கு மனம் பொறுக்கவில்லை; “சரி, சரி: சாப்பிடுப்பா, பாபு’ என்று குரல் கம்மச் சொன்னாள்; அன்பு கம்மாமல் வேண்டினாள்.
‘பஸ்ஸர்’ ஒலிக்கிறது.
ரஞ்சித் கிளம்பினர்.
ரஞ்சனி முந்திக் கொண்டாள்.
அங்கே-
மகேஷ் காட்சி கொடுத்தார்!
தனியாக அல்ல!-
பெண் ஒருத்தியோடு!...
66