பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மகேஷுக்கு” என்று ஒர் அழுத்தமான தொனியில் விடை கூறினாள் ரஞ்சனி.

"மகேஷ-க்கா?” -

“ஆமாம், மகேஷாக்கேதான்!-உன் அன்புமகேஷாக்கேதான்!" என்று ஒரு படி கூடுதலான அழுத்தத்துடன் தெரியப்படுத்தினார் ரஞ்சித்.

இட்டிலியும் கையுமாகவும் மெளனப் பிண்டமாகவும் காட்சியளித்த பாபுவின் இடது கை, அவனது கன்னங்கள் இரண்டையும் தடவிப் பார்த்துக் கொண்டபோது, அவன் கண்கள் தளும்பத் தொடங்கிவிட்டன.

ரஞ்சனிக்கு மனம் பொறுக்கவில்லை; “சரி, சரி: சாப்பிடுப்பா, பாபு’ என்று குரல் கம்மச் சொன்னாள்; அன்பு கம்மாமல் வேண்டினாள்.

‘பஸ்ஸர்’ ஒலிக்கிறது.

ரஞ்சித் கிளம்பினர்.

ரஞ்சனி முந்திக் கொண்டாள்.

அங்கே-

மகேஷ் காட்சி கொடுத்தார்!

தனியாக அல்ல!-

பெண் ஒருத்தியோடு!...

66