பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
அந்தி நிலாச் சதுரங்கம்

1. பொருள் பொதிந்த பொருள்

!....

ரஞ்சனியைக் காணவில்லையே?...

எங்கே போய்விட்டாள்?.

இருப்புக் கொள்ளாமல் தவித்தார் ரஞ்சித். ‘சொல்லி வச்ச மாதிரி, சரியாகப் பத்து நிமிஷம் ரஞ்சனி என்னோட கண்களிலே தென்படவே இல்லே!’ நெஞ்சை என்னவோ செய்தது. தடவிக் கொடுத்தார். எதிர்ப்புறத்தில் மீண்டும் அவரது பார்வை நிலைத்தது.

கூடத்தில் பிஞ்சுக் கதிர்கள் கூடிப் பிடித்துக் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன.