பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நேரெதிர்ப் பங்களாவில் மதிப்புக்குகிய திருமதி டி.ஆர் ராஜகுமாரி அன்போடும் ஆசையோடும் வளர்க்கும் குயில் அழகாகக் கூவுவதில் ஆச்சரியம் இல்லைதான்!-ஆனால். அது ஏன் இப்படிச் சோகக் கீதம் இசைக்க வேண்டும? அன்பு கொழிக்கின்ற இடத்தில், சோகத்திற்கும் இடம் இருக்குமா, என்ன? .

மகேஷ் பிரமித்து நின்றார்!-ஆசைக்கனவு பலிக்காமல் தோல்வியடைந்திட்ட தனது முதற்காதலின் நெஞ்சுருக்கும் சோகக் கதையை அவர் அதே நேரத்தில் நினைவு கூர்ந்திருக்க வேண்டும்:-"ர...!"-பெயரின் முதல் எழுத்தை உச்சரித்து, பெயருக்குடைய அந்தச் சீதேவியை விளித்து ஆறுதலடைய முயற்சி செய்த அவர், பெயருக்கு உரிய முதல் எழுத்தை உச்சரித்ததோடு நின்று விட்டார்; நிறுத்தி விட்டார். கொஞ்சப் பொழுதுக்கு முந்தி, சாதாரணமான டவல் ஒன்று அசாதாரணமான கசப்புச் சூழலை உருவாக்கி வேடிக்கை காட்டிய நேரத்திலே பேசிய ரஞ்சித்தின் சொற்கள் அவர் மனத்தில் இப்பொழுது கூட திரும்பத் திரும்ப ஒலித்தன எதிரொலித்தன. ரஞ்சித் எவ்வளவு உயர்ந்த மனிதர்!- அன்பினாலும், அபிமானத்தினாலும், கருணையினாலும் மனிதத்தன்மையினாலும் உயர்ந்திட்ட அந்த மனிதரா இப்போது துரும்பைக் கூட தூணாகப் பெரிது படுத்திச் சலனம் அடையத் தொடங்கி விட்டார்: சாந்தியை அருளவல்ல தெய்வத்திற்குக் கூடச் சலனம் என்ற ஒன்று ஏற்படமல் தப்பாது போலிருக்கிறது!- இதயப் படுதாவில் நிழலாடிய ரஞ்சனியின் உயிர்ச் சித்திரத்திலே, இப்போது, பாபுவின் உருவமும் ‘மிக்ஸ்' ஆயிற்ற!:- “பா...பு!” போய்விட மனமில்லாமல் நின்றார்: நிற்க மனமில்லாமல், போய் விடத் துடித்தார்.

பாபு எத்தனை அழகுக் குறியீடுகள் குலுங்க, அலுங்காமல் குலுங்காமல், உறங்கிக் கொண்டிருக்கிறான்! பாரதியின் கண்ணபெருமானா இந்தப் பாபு?...

90