"ஐயையோ!"-ஓலமிட்டவராக அங்கிருந்து ஒடிப்போய் விட முனைந்தார் மகேஷ்!-ரஞ்சித்-ரஞ்சனி குடும்பத்தின் நண்பரான மகேஷ்: 'ஞான் பாவப்பட்ட ஜென்மம்!...”
அப்போது:
கதவு திறந்த அரவம் கேட்டது.
அரவம் கண்ட பாவனையில், அச்சமடைந்து, திரும்பிப் பார்த்தார் மகேஷ் ‘பாபு...!’ என்று தன்னையும் மறந்து விட்ட நிலையில் மகிழ்வின் பூரிப்புடன் கூவி அழைத்தவாறு, பாபுவிடம் பாய்ந்தார்.
"மகேஷ் ஸாரே!...நான் அவசரமாக பாத்ரூம் போய்க்கிணு இருக்கேனாக்கும்!:”
“திரும்பி வா, பாபு: நான் காத்துக்கிட்டு இருப்பேன்!"
"ஏனாம், ஸாரே?”
"உனக்காக!”
"எனக்காகவா?”
"ம்!....
ஏன்?*
“......”
"என்ன ஸார், பேச்சையும் காணோம்? மூச்சையும் காணலையே? ஐயோ, பாவமே, பரிதாபமே!...போனவனுக்குத் திரும்பத் தெரியாதாக்கும்?...நீங்க வெளியே போங்க எங்கே, வேகமாய்ப் போங்க, பார்க்கலாம்!... ம்...எங்க அப்பா உங்களைக் கூப்பிடுறமாதிரி இருக்கு; ம், ஜல்தி போங்க, ஸாரே!”
பாபு போய்விட்டான்.
92