பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேஷ் விரைவாகவும் போகவில்லை; மெதுவாகவும் போகவில்லை; அப்படியே, அடித்து வைத்த கல்லாகவே நின்றுவிட்டார். அவர் மனமும் கல்லேதானோ? கல்லுக்கு ஏமாற்றத்தை அனுபவிக்கத் தெரியுமா, என்ன? கண்கள் குளமாயின. பாபு நெருப்பா ? நெருங்கக்கூட முடியவில்லை பழனிமலையில் அன்றாெரு தினத்தில் அவன் தன்னை நெட்டித் தள்ளியதும் இப்போது சந்தடி சாக்கில் படம் காட்டியது. "பா...பு!"-கன்னி மரியாளும குழந்தை ஏசுவும் தீட்டப் பட்ட பாபுவின் அந்தச் சித்திரமும் இப்போது அவரது சிந்தையில் நிழலாடத் தவறவில்லை!

மெளனம் சிரித்தது!

மகேஷ் திரும்பினார்.

அங்கே:

ரஞ்சித் நின்றிருந்தார்.

"ரஞ்.ரஞ்சித், என்னே ஷமிக்கணும்.”

"உம்!" .

"பாபு உறங்கிக்கிட்டு இருந்தான்.”

"உம்!"

பாபுவோடே பேசிடலாம்னு பார்த்தேன்.”

"உம்."

"ஆனா, முடியல்லேங்க.”

"உம்.”

"இப்போ, பாபு யாத்ரூம் போயிருக்கான்.’

"ஊம்.”

காலடி ஓசை கேட்டது.

அ-6-A

93