மகேஷ் விரைவாகவும் போகவில்லை; மெதுவாகவும் போகவில்லை; அப்படியே, அடித்து வைத்த கல்லாகவே நின்றுவிட்டார். அவர் மனமும் கல்லேதானோ? கல்லுக்கு ஏமாற்றத்தை அனுபவிக்கத் தெரியுமா, என்ன? கண்கள் குளமாயின. பாபு நெருப்பா ? நெருங்கக்கூட முடியவில்லை பழனிமலையில் அன்றாெரு தினத்தில் அவன் தன்னை நெட்டித் தள்ளியதும் இப்போது சந்தடி சாக்கில் படம் காட்டியது. "பா...பு!"-கன்னி மரியாளும குழந்தை ஏசுவும் தீட்டப் பட்ட பாபுவின் அந்தச் சித்திரமும் இப்போது அவரது சிந்தையில் நிழலாடத் தவறவில்லை!
மெளனம் சிரித்தது!
மகேஷ் திரும்பினார்.
அங்கே:
ரஞ்சித் நின்றிருந்தார்.
"ரஞ்.ரஞ்சித், என்னே ஷமிக்கணும்.”
"உம்!" .
"பாபு உறங்கிக்கிட்டு இருந்தான்.”
"உம்!"
பாபுவோடே பேசிடலாம்னு பார்த்தேன்.”
"உம்."
"ஆனா, முடியல்லேங்க.”
"உம்.”
"இப்போ, பாபு யாத்ரூம் போயிருக்கான்.’
"ஊம்.”
காலடி ஓசை கேட்டது.
அ-6-A
93