பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அந்த நாய்க்குட்டி எங்கே?



“ஓ, பேஷா வர்றேன். எனக்குக் கூட படத்திலே நடிக்க வேணும்னு ரொம்பவும் ஆசை. உன்கூட நடிக்கிறதுக்கு எனக்கு சந்தர்ப்பம் வந்தா, ரொம்பவும் குஷியாயிருக்கும். அத்தோட என் நாய்க்குட்டியையுங் கூடப் படத்திலே நடிக்கவச்சு, இதையும் ஒரு பெரிய ஸ்டாராக ஆக்கனும்!” என்றான் பூபாலன்.

அதே சமயம், வாசலிலே சினிமா விளம்பர கார் ஒன்று போய்க் கொண்டிருந்தது. நாய்க்குட்டியைக் கீழே விட்டுவிட்டு, வெளியே ஒடினான் சிறுவன். சிறுமியும் தொடர்ந்து அவனுடன் ஒடினாள்.

விளம்பரத்தில் சிறுவன் சுதாகரின் படம் இருந்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டான். சுதாகர் மாதிரி தானும் ஒரு ‘பால நட்சத்திரமாக’ ஆவது போன்ற இன்பக் காட்சிகள் தோன்றின.

பூங்கோதை அவன் தோளைத் தட்டி அழைத்ததும்தான், பூபாலனுக்குச் சுயநினைவு வந்தது.

“போகலாமா, கார் காத்திருக்குது?”என்று நினைவு படுத்தினாள் பூங்கோதை,

“இதோ.என் நாய்க்குட்டியையும் எடுத்துக்கிட்டு நொடியிலே ஒடியாந்துடுறேன்...!” என்று சொல்லிவிட்டு நாய்க்குட்டியைத் தேடினான் பூபாலன்.

ஆனால்-

“ஐயோ, நம்ப நாய்க்குட்டியை கார்ப்பரேஷன் நாய் வண்டியிலே தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயிட்டாங்களே!”என்று அலறினாள் பூபாலனின் தாய்.

“ஐயோ!"என்று கூப்பாடு போட்டவாறு, பூபாலன் வெறி பிடித்தவனைப் போலத் தெருவிலே ஓடிக் கொண்டிருந்தான்.