பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இளவரசி வாழ்க



அதே தன்மானத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தன்னுடைய வீர வாளைச் சுழலவிட்டாள் இளவரசி கன்யாகுமரி!

இருதரப்பின் வாள்களும் ஒன்றையொன்று தன்னம்பிக்கையோடும் தன்மானத்தோடும் சந்தித்துக் கொண்ட நேரத்தில்–

“நில்லுங்கள் இருவரும் அப்படியே நில்லுங்கள்!”

ஆமாம்; சிருங்காரபுரியின் மாண்புமிக்க–மேன்மைதங்கிய மாமன்னர் பிரான் பூபேந்திர பூபதி அவர்கள்தாம் ஆணையிட்டார்!– ஆணையைத் தொடர்ந்து, எதிர்ப்புறம் நோக்கிக் கைகளை உயர்த்தி அடையாளம் காட்டினார். வெற்றிமுரசும் விண் அதிரவும் மண் அதிரவும் வீர முழக்கம் செய்தது!

வேழநாட்டரசன் விஜயேந்திரனும் சிருங்காரபுரியின் இளவரசி கன்யாகுமரியும் புது நிலவும் புன்னகையுமாகப் பார்த்துக் கொண்டனர்!

மாமன்னர் பூபேந்திர பூபதி மறுபடி பேசத் தொடங்கினார்:

“விஜயேந்திர மன்னரே!...இளவரசி கன்யாகுமரியே!...நீங்கள் இருவருமே, நடக்காத இந்தப் போரில் வெற்றிபெற்று விட்டீர்கள்!.. ஒருவருக்கு மற்றவர் துளியும் விட்டுக் கொடுக்காமல், சரி சமானமான தன்னம்பிக்கையுடனும் தன்மானத்துடனும் உருவிய உங்கள் வாள்களை விளையாடச் செய்த அந்தத் துணிச்சலே உங்கள் இருவருக்கும் வெற்றிவாகையைச் சூட்டிவிட்டது!... ஒன்று பட்ட உங்கள் இருவரின் உள்ளக்காதலையும் மறந்து, நீங்கள் இருவரும், நாட்டின் தன்மானம் காத்திடவும் தன்னம்பிக்கையுடனே போரிடத் தொடங்கிய அந்த மகத்தான மாண்புதான் உங்கள் இரு வருக்கும் சரிசமமான வெற்றியை வழங்கிவிட்டது!...”

மாமன்னருக்கு மூப்பின் தளர்ச்சியால் மூச்சிரைத்தது. மீண்டும் பேச்சைத் தொடரலானார்:

“விஜயேந்திரமன்னரே! நீங்கள் திறை செலுத்தாததால், என் கவுரவம் பாதிக்கப்பட்டுவிட்டதாக நான் சொன்னேன்!. அதற்கு