பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அந்த நாய்க்குட்டி எங்கே?



“அண்ணாச்சி...”

“ஆ! பூங்கோதையா...? என் அருமைத் தங்கச்சி பூங்கோதையா? நீ எப்படி இங்கே அகப்பட்டுக்கிட்டே? கொள்ளைக் கூட்டத்துக்குப் பலியாகும் தலைவிதி என்னோடு மட்டும் தப்பலையா? உனக்குங்கூடவா அந்தத் தலை எழுத்து....? நான் சாவதைப் பற்றி அக்கறைப்படலே; அச்சப்படலே. ஆனா, உன்னைக் காப்பாற்றி உயிர் தப்பிக்கச் செய்யறதிலே என் உயிர் போனா, அதைத்தான் பெரும் பாக்கியமாய் நினைப்பேன். இது படைத்தவன் பேரிலே இடுற ஆணை, தங்கச்சி!” என்று வீறு கொண்டு ஆவேசத்துடன் முழங்கலானான் சிறுவன்.

அதே கணம்–

“ஹ ஹ் ஹா!”

“யார், நீயா சிரிக்கிறாய்? பிஞ்சுக் குழந்தைகளைத் தஞ்சம் அடையச் செஞ்சுட்ட, உன்னுடைய வெற்றியை நினைச்சா அப்படி அட்டகாசச் சிரிப்புச் சிரிக்கிறே? இல்லை, பச்சை ரத்தத்தைக் குடிக்கப் போகிறோமே என்ற போதை வெறியிலே நீ அப்படி எக்காளமிட்டுச் சிரிக்கிறாயா? ஆனா, ஆண்டவன் உன்னைக் கண்டு பரிகாசமாகச் சிரிக்கிறதை மட்டும் நீ மறந்திடாதே...?” என்று ஆத்திரத்துடன் பேசினான் பூபாலன்.

அப்பொழுது ஒர் அதிசயம்!

என்ன ஆச்சரியம்? கொள்ளைக் கூட்டத் தலைவனுக்குக் கூடக் கண்ணீர் வருமா, அவனுக்குக் கூட இதயம் என்ற ஒன்றை மறக்காமல் கொள்ளாமல் பிரம்மா படைத்திருக்கிறானா...?

“தம்பி, இதோ இந்தக் கடுதாசியைப் பார். உன்னால் எழுதப் பட்டதுதான். இது பற்றி உனக்கு நினைவிருக்கிறதா? நீ சர்க்கஸ் கூடாரத்திலேயிருந்து தப்பப் போகிற துப்பு பூங்கோதைக்குத் தெரிஞ்சுது பூங்கோதை தக்க ஏற்பாடுகளோடு வெளி வாசலிலே காத்துக் கிட்டிருந்துச்சு. நீ ‘பார்’ விளையாடின கையோட நாய்க்-