பூவை எஸ். ஆறுமுகம்
57
அடுத்த அறையில் சரக்குப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
கோபு ஒரு போண்டாவை எடுத்து ஊதி, அதை உமைபாலனிடம் நீட்டினான்.
உமைபாலன் ரொம்பவும் யோசித்தான்; பிறகு தயங்கினான். “எனக்கு உங்க அன்புதான் இப்ப வேணுமுங்க. என்னாலே உங்களுக்கு ஒரு பத்து பைசா நஷ்டம் ஏற்பட மனக வரலீங்க!” என்று நாசூக்காகச் சொன்னான்.
கோபு வியப்பில் விரிந்த விழிகளுடன் அவனையே இமை மூடாமல் பார்த்தான். ஏனோ, புராண புருஷர்கள் சின்னஞ் சிறார்களாக இருக்கையில் செய்து காட்டிய திருவிளையாடல்களின் நிழல்கள் அவன் உள்ளத் திரையில் ஓடிக் காண்பித்தன.
“தம்பி!”
அண்ணா!”
பாசத்தின் குரல்கள் தழுவின.
“உனக்கு ஊர்?”
“ராமநாதபுரம் சீமைங்க ”
“அப்பா அம்மா?”
“நான் அனாதைங்க!”
“உனக்கு என்ன வேலை தெரியும்?”
“இன்ன வேலை தெரியும்னு சொல்றதுக்கு எனக்கு முன் அனுபவம் ஏதுமில்லீங்க. இப்பத்தான் முழுவருடப் பரீட்சை எழுதினேன். ஒன்றுவிட்ட மாமாவோடே கொஞ்சம் மனத்தாங்கல். பிரிஞ்சு வந்திட்டேன். ஆனதாலே, எந்த வேலையையும் பெருமை சிறுமை பார்க்காமல் பார்க்க வேணுமிங்கிற நினைப்பு எனக்கு இருக்குதுங்க!”