பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

87



உமைபாலன் தடுமாறிப் போனான். காற்சட்டையிலிருந்த தாளை பிரித்தான். அதில் பிரசுரமாகியிருந்த ′காணவில்லை’ விளம்பரப் பகுதியைக் காட்டினான்.

“இந்தாப் பாரய்யா. இதுதான் நான்... படம் சரியாத் தெரியாது... இதுதான் என் அப்பா... பெயர்... செங்காளியப்பன்..... ஊர், காரைக்கால்!” மீண்டும் செருமினான் பையன்.

“இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?″

″ஐயோ, கடவுளே!“ புரண்டான் உமைபாலன்.

″போடா தள்ளி” என்று ஆத்திரத்துடன் நெருங்கிய ஐயர், அக்கிழவனை ஒதுக்கித் தள்ளினார். அருகில் ஓடி வந்த ஜெயராஜைக் கன்னத்தில் அறைந்து நெட்டித் தள்ளினார். கிழவனை மீண்டும் அடிக்கக் கழி ஒன்றை எடுத்தார்.

அப்பொழுது, ஒரு கை வந்து அதைத் தடுத்தது.

திரும்பினார் கனபாடி,

அங்கு காரைக்கால் செங்காளியப்பன் கண்ணீர் வழிய நின்றார்!

“ஐயா! இந்தக் கிழவரை ஒண்ணும் செய்யாதீங்க... என் மகன் எனக்குக் கிடைச்சிட்டதுக்கு உண்டான புண்ணியத்திலே இவருக்கும் இந்தப் பெண் பூவழகிக்கும் பங்கு ரொம்ப உண்டு. எல்லாம் நான் நடத்திய நாடகம்... தெய்வம்... என் தெய்வம் மனமிரங்கிட்டுது!” உணர்ச்சி வசப்பட்டு நின்றார் அவர்.

உமைபாலன் தன் தங்கையை வாரியெடுத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தான். பிறகு, குழந்தையைத் தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு, அவர் பாதங்களிலே விழுந்து விம்மினான். “ நான் பாவி. உங்க மனசைப் புண்படுத்திட்டேன்...! பொய்யும் சொல்லிப்பிட்டேன்..” என்று தலையில் அடித்துக் கொண்டான்.