பூவை எஸ். ஆறுமுகம்
97
“ஏன்?”
“அப்படி ஒர் ஆவல் என்னை உந்தித் தள்ளுகிறது!”
“ஓ!”
அவள் புறப்பட்டாள். மெட்டி இசைத்தது.
“ஆமாம், உன் பெயரைச் சொல்லவில்லையே நீ?”
“நீங்கள் கேட்டால்தானே சொல்வேன்?... பெண் எதையும் வலுவில் திணிப்பது பண்பாடல்ல, எங்கள் நாட்டில்!”
“இங்கு எங்கள் நாட்டிலும் அதுதான் மரபு! ம்... உன் பெயர்?”
“நாதசுரபி!..”
“புதிதாக ஒலிக்கிறது!”
“நானே புதியவள்தான்!”
அவன் சிரிப்புடன் நடந்தான். அவளைத் தொடரச் செய்தான். குளம்புகள் ஓசைப்படுத்தின.
நடந்து வந்த நாதசுரபி அந்த ஆலமரத்தின் அருகில் சற்று நேரம் நின்றாள். அரண்மனையின் குடதிசைக் கோட்டைச் சுவர் கம்பீரமாக மின்னியது. நின்றவள், சற்றும் எதிர்பாராத வகையில் ஏனோ மயங்கிச் சாய்ந்தாள்.
நடத்திச் சென்ற குதிரையை நிறுத்திவிட்டு, தண்ணீருக்காகத் தேடினான். தெரிந்த கிழவியிடம் வேண்டி நீர் பெற்று, அக் கன்னியின் முகத்தில் தெளித்தான்.
அப்போது, மாண்புநிறை மகாராணி அழகிய சீதேவி அம்மையார் சிவபதம் அடைந்த துயரச் செய்தி கிட்டவே, படைத் தலைவன் பராக்கிரமசீலன் விம்மிப் புடைத்தபடி பறக்கலானான்!