பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


மனதிலே அரக்கர்களாகவும், செயலிலே விலங்குகளாகவும் அல்லவா மாறிப் போய் விடுவார்கள். எத்தனை எத்தனை வழிகளில் மடக்கப் பட்டிருக்கின்றார்கள் இந்த மனிதர்கள் என்பது இப்பொழுதல்லவா புரிகின்றது!

Ο O O

இறைவனின் தந்திரம்

எலிக்கு எத்தனையோ வளைகள். ஏமாற்றுவோர்க்கு எத்தனையோ வழிகள். வளைகள் பல இருந்தாலும், வளைக்கு வெளியே எளிதாக எலி மாட்டிக்கொள்வது போல,வழிகள் பல இருந்தாலும், ஏமாற்றுபவர்கள் எளிதாக ஏமாந்து மாட்டிக் கொள்கிறார்கள். அதுதான் இறைவனின் தந்திரமான ஆட்சி முறையாகும்.

Ο O O

மணக்கும் உலகம்

யாரிடம் போனாலும் அழகைக் காட்டி மணத்தைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறதே மலர்-அது போலவே ஒவ்வொரு மனிதனின் சொல்லும் செயலும் இருக்க வேண்டும். இருந்தால் உலகமே மணக்காதா?

Ο O O

சமாளிக்கும் கலை

ஒவ்வொருவர் உள்ளத்திலும் எத்தனை எத்தனை கவலைகள், குழப்பங்கள், ஆசைகள்,