பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


நெருப்பு மலை

பிறரை மகிழ்ச்சிப்படுத்துகின்றவரால் தான், தானும் மகிழ்ச்சியாக வாழமுடியும். பிறரை எரிச்சல் ஊட்டிவிட்டு இன்பம் அனுபவிப்பது என்பது, நெருப்பின் மேல் உட்கார்ந்து கொண்டு குளிர் காய்பவன் நிலையில் தான் அமையும்.

Ο O O

தாய்ப் பண்பு

குழந்தை தூங்கும் பொழுது தான் துாங்கிக் கொண்டு, குழந்தை விழித்துக் கொண்டவுடன் தானும் விழித்துக் கொண்டு காரியம் செய்து சாதித்துக் கொள்கிற ஒரு தாயைப் போல; தான் கொண்ட நோக்கத்திற்காக இலட்சியத்திற்காக சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து வாய்ப்புள்ள போது காரியம் ஆற்றிச் சமாளிக்கின்றவர்களே லட்சியவாதிகளாகின்றார்கள். வாழ்க்கையில் உயர்கின்றார்கள். பிறர் போற்ற வாழ்கின்றார்கள்.

Ο O O

இனிமையும் தனிமையும்

இனிமைப் படுத்தாத சூழ்நிலைகள் தான் ஒருவனை தனிமைப்படுத்தி விடுகின்றன. கனிவைக் கொடுக்காத சூழ்நிலைகள் தான் ஒருவனுக்கு துணிவைக் கொடுக்கின்றன.

Ο O O