24
நெருப்பு மலை
பிறரை மகிழ்ச்சிப்படுத்துகின்றவரால் தான், தானும் மகிழ்ச்சியாக வாழமுடியும். பிறரை எரிச்சல் ஊட்டிவிட்டு இன்பம் அனுபவிப்பது என்பது, நெருப்பின் மேல் உட்கார்ந்து கொண்டு குளிர் காய்பவன் நிலையில் தான் அமையும்.
Ο O O
தாய்ப் பண்பு
குழந்தை தூங்கும் பொழுது தான் துாங்கிக் கொண்டு, குழந்தை விழித்துக் கொண்டவுடன் தானும் விழித்துக் கொண்டு காரியம் செய்து சாதித்துக் கொள்கிற ஒரு தாயைப் போல; தான் கொண்ட நோக்கத்திற்காக இலட்சியத்திற்காக சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து வாய்ப்புள்ள போது காரியம் ஆற்றிச் சமாளிக்கின்றவர்களே லட்சியவாதிகளாகின்றார்கள். வாழ்க்கையில் உயர்கின்றார்கள். பிறர் போற்ற வாழ்கின்றார்கள்.
Ο O O
இனிமையும் தனிமையும்
இனிமைப் படுத்தாத சூழ்நிலைகள் தான் ஒருவனை தனிமைப்படுத்தி விடுகின்றன. கனிவைக் கொடுக்காத சூழ்நிலைகள் தான் ஒருவனுக்கு துணிவைக் கொடுக்கின்றன.
Ο O O