இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25
சிறந்த மனிதர்
வகிக்கின்ற பதவியால் மரியாதை பெறுகிறவன் சாதாரண மனிதன். பதவியினைக் கொண்டு சிறப்பான காரியங்கள் செய்து, பதவிக்கு பெருமை ஊட்டுகின்றவனே சிறந்த மனிதன்.
Ο O O
விசாலமான மனம்
பிறரது திறமையைப் புரிந்து கொண்டு பாராட்டுவது என்பது பெரிய விஷயம், அதற்காக அவர் மிகவும் திறமையான செயல்காரராக இருக்க வேண்டுமென்பதில்லை. அவருக்கு விசாலமான மனதுதான் வேண்டும். அதுவும் பண்பட்ட மனமாகத்தான் இருக்கமுடியும்.
Ο O O
உத்தமப் பண்பு
எதையும் எதிர்பார்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் புகழ்வது என்பது இப்பொழுது எல்லாம் சர்வ சாதாரணமாகப் போய் விட்டது. சிறு உதவியைக் கூட எதிர்பார்க்காமல் ஒருவரது அரிய பண்பினை அறிந்து பாராட்டுபவர் தான் உத்தமமான மனிதர் என்று மதிக்கப் படுவார்கள்.
Ο O O
அ.க...2