பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

 இறைவன் தரும் பரிசு

ஏதாவது ஒரு துறையில் விடுபடாத விருப்பத்துடன் முயற்சியை விட்டுவிடாமல், வெற்றியோ தோல்வியோ எதையும் பாராமல், தொடர்ந்து வேலை செய்து கொண்டே வந்தால்-ஒருநாள் நாம் எதிர்பார்த்த-எதிர்பார்க்கின்ற-எல்லா புகழும் -எல்லா வருமானமும் வந்துதான் தீரும்.

அதுதான் இறைவனின் இனிய பரிசு முறையாகும்.அந்தப் பரிசு தப்பாமல் வந்து சேரும். இந்த எதிர்பார்ப்புடனே உழைக்கலாம். வெற்றி நிச்சயம்.

Ο O O

துாக்கம் கெடுவது ஏன்?

பிறரை மகிழ்விக்க முயல்பவர்கள் தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிறரைப் பார்த்துப் பொறாமைப் படுபவரும் பிறரைத் துன்புறுத்த விழைபவரும்-மாறாத் துன்பத்தையும் துாக்கமின்மையையும் தான் துணையாகக் கொள்கின்றார்கள்.

Ο O O

புகழை வளர்த்துக் கொள்ளுங்கள்

எல்லோருக்கும் தெரிந்தவராக புகழ் உள்ளவராக எப்படியாவது வந்து விடுவது என்பது எல்லோராலும் முடிந்ததே.