பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


ஒரு நாளைக்கு போதுமா?

ஒரு நாளைக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நாம் எப்படி வேண்டுமானாலும், விருப்பம் போல வாழ்ந்து விடலாம். ஆனால், தினந்தோறும் நாம் மகிழ்ச்சியாக வாழவிரும்பினால், கொஞ்சம் கட்டுப்பாட்டோடு இருந்து தான் தீர வேண்டும். அதாவது உள்ளத்தில் வாய்மை, உடலில் தூய்மை, வழியில் நேர்மை, சிரமம்தான். ஆனால் இதில் தொடர்ந்து இன்பம் கிடைக்கிறதே!

Ο O O

ஜீரணித்த சினிமா

சினிமா, மக்களை சீரழித்து விட்டது என்கிறார்கள். இல்லை மக்களை சினிமா ஜீரணித்து விட்டது. அவ்வளவு தான்.

Ο O O

உண்மையான அன்பு

உண்மையான அன்பு கொடுத்து மகிழ்கிறது. போலியான அன்பு எப்பொழுதும் எடுத்து மகிழ்கிறது. சில சமயங்களில் தடுத்தும், பல சமயங்களில் கெடுத்தும் மகிழ்கிறது.

Ο O O