பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


இடையர்களும் கடையர்களும்

வைத்தியர்கள் சொல்வதற்கு முன்னே உடலை நன்றாக பாதுகாத்துக் கொண்டு நலமாக வாழ்பவர்கள் முதல் தரமானவர்கள். அவர்கள் வாழ்க்கையில் சிறக்கும் முதல்வர்கள் ஆவார்கள். வைத்தியர்கள் எச்சரித்த பிறகு, வந்த நோய்களை மாற்றுவதற்காக உடலைப் பாதுகாத்து வாழ முயல்பவர்கள், இடைத்தரமானவர்கள். சொல் பேச்சுக் கேட்டு சுகமாக வாழ முயலும் இடையர்கள்.

ஆனால், தானும் முயலாமல், வைத்தியர் எச்சரித்த பிறகும் நடக்காமல்,உடலை மறப்பவர்கள் கடையர்கள் ஆவார்கள். ஆமாம்! அவர்களை நோய்களும், துன்பங்களும் தினம் குடைந்து கொண்டும், கடைந்து கொண்டும் கிடக்கும். கடையப்படுவர் கடையர்தானே!

Ο O O

பண சக்தி

பணம் குறையும்பொழுது உடலில் சோர்வும், மனதில் பலஹீனமும் ஏற்படுகிறதே! ஏன்? பணத்திற்கு அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது. இல்லையென்றால், மனிதக் கூட்டமே பணத்தின் பின்னே முண்டியடித்துக் கொண்டு ஏன் ஒடுகிறது? அந்தப் பிரதிபலிப்புதான் பணக் குறைவும் சக்திக் குறைவும்.

Ο O O