இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
ஒரு சில சுவையான அனுபவக்கருத்துக்களை மட்டும் தொகுத்து, அனுபவக் களஞ்சியம் என்ற பெயரில் புத்தகமாக்கிக் உங்களிடம் தந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில் நான் பலமுறை பெற்ற ஏற்ற இறக்கங்கள் என்னை கடுமையான உழைப்பாளியாக்கி விட்டது. அதற்காக உதவிய அத்தனை பேர்களுக்கும், என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது.
இனி நீங்கள் படிக்கத் தொடங்கலாம்.
அழகாக அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டார்ஸ், ஆக்கப்பணிகள் ஆற்றிய R. ஆதாம் சாக்ரட்டீஸ் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி.
அதிகமாக நூல்களை எழுதும் பணியில் என்னை ஆதரித்து ஊக்குவித்து வரும் அனைவருக்கும் என் நன்றி.
ஞானமலர் இல்லம் அன்பன்
சென்னை -17. எஸ். நவராஜ் செல்லையா.