பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. இலங்கைப்பொன் நகரை புடைத்து பொடித்து கிங்கரரை கொன்று குவித்து இராவணன் அதிர பஞ்ச சேனாதிபதிகளை அழித்த பராக்கிரமனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


11. வாலுக்குத் தீயிட்ட வல்லரக்கர் மாநகரை காலும் கனலும் கலந்தடித்து நீராக்க கடலாடி சிரஞ்சீவி வரத்தோடு திரும்பிய வரதனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


18. சீலத்தில் பெரிய சிவக்கொழுந்தே சிரஞ்சீவியே காலத்தை வெல்லும் கணக்கறிந்த ஞானியே நீதியில் வலிய நியாய மூர்த்தி நீயே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே