பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைம்ை உரை 123 சேர்ந்த ஓர் இனத்தவர் என்ற எண்ணம் நம் மனத்தில் தோன்றலா யிற்று. வாழ்விலும், தாழ்விலும் நம்முடைய விதி ஒன்ருகவே இருக் கிற தென்பதும், நம்மை ஒன்றுபடுத்தும் பிணைப்பைக் கண்டுபிடித்து, அதனே வலுப்படுத்தினலொழிய, நாம் வளர்ச்சி யடைய முடியாது என்பதும் இப்போது நம்மால் அறியப்பெற்ற பாடங்களாகும். - இதுவரையில் இத்தகைய ஓர் அறிவு, ஏதோ சில சமயங்களில் தோன்றுவதாகவும், அறிவுடையவர்கள் மட்டும் காணக் கூடிய தாகவும் இருந்தது போக, இப்போது கம் அனைவருக்கும் தோன்றத் தொடங்கிவிட்டது. இவ் வுண்மையை நாம் முழுவதும் உணரதி ருந்த காரணத்தினுல்தான் நாட்டுக்குச் செய்கின்ற தொண்டுகளில் நாம் முழு மனத்தோடு ஈடுபடாமல் இதுவரை இருந்துவிட்டோம். இத்தகைய ஒரு சூழ்நிலை இன்னும் நெடுங் காலத்திற்கு இப் படியே இருந்திருக்கும். ஆனல் லார்டு கர்ஸன் பிரபு திடீரென்று வலுவாகத் திரையைக் கிழிந்துவிட்டமையின், இதுவரையில் மறைக் திருந்த இந்த உணர்ச்சி இப்போது மறைக்கப்பட முடியாமல் வெளிப் படலாயிற்று. வங்காளத்தைத் துண்டாட வேண்டுமென்ற ஆணை பிறந்தவுடனேயே கிழக்கிலும், மேற்கிலும் இருந்த வங்காளிகள் அனேவரும் ஒருவரே என்ற கோஷம் கிளம்பலாயிற்று. வங்காளத் தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களிடையே இத்தகைய ஒரு மனப்பான்மை இருந்திருக்கும் என்பதையும் இந்த ஒற்றுமை மனப் பான்மை வங்காளிகளின் எலும்பிலும், குருதியிலும் கலந்திருக் கின்றது என்பதையும் இதுவரையில் நாம் உணராமல் இருந்து விட்டோம். பிரிவினையின் வலி பொறுக்க முடியாத கிலேயை அடைந்த வுடன், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசரிடத்தில் முறையிட் டால் இதற்கு ஒரு வழி கான முடியும் என்று கினைத்தோம். ஆளுல் அரசருடைய கருணைக்கு மனுச் செய்துகொள்வது தவிர, இத் துயரத்தைப் போக்கிக் கொள்வதற்கு வேறு வழிகளும் உண் டென்பதை அந்த கிலயில் காம் அறியவில்லை. - திக்கற்றவர்களுக்கு மிகவும் தேவைப்படுவதாகிய பிற காட்டா . ருடைய கருணை நம்மைப் பொறுத்தமட்டில் மறுக்கப்பட்டு விட்டது. தன்னை கொண்டியென்று கினைத்துக்கொண்டு, இருந்த இடத்தை விட்டு அசையால் பல நாட்களாக இருந்த ஒரு மனிதன், தன் னுடைய வீடு தீப்பற்றிக் கொண்டவுடன், தன்னுல் ஒடக்கூட முடியு மென்ற உண்மையைத் திடீரென்று கண்டு பிடித்ததைப் போலவே, இன்று காமும் இருக்கின்ருேம். இந்த உணர்ச்சிப் போரட்டத்தில்,