பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 - அனைத்துலக மனிதனை நோக்கி இடத்தில் அமைந்து விட்டது. அரசரே உண்மையில் ஆளவேண் டிய நிலை ஏற்பட்டவுடன் அவருடைய தனிப்பட்ட இடத்திலிருந்து, பொதுமக்கள் காணுமாறு, அவரை வெளியே கொண்டுவர வேண் டிய நிலை ஏற்பட்டது. இதேபோல நம்முடைய ஸம்ஸ்கிருதப் பாட சாலைப் பண் பாடு, ஏனைய பண்பாடுகளே யெல்லாம் கெளரவிக்காத - முறையில், தன்னுடைய மறைவிடத்தில் தானே அடங்கி யிருந்தது. அந்தப் பண்பாட்டை, பிரம்மனுடைய வாயிலிருந்தே நேரிடையாக வந்தது என்றும், சிவனுடைய ஜடையிலிருந்து வந்தது என்றும் அதனல், அது உலகத்திலுள்ள மற்றப் பண்பாடுகளைப் போன்ற தன்று என்றும், ஆகவே அதனைத் தனியாக வைத்துப் பாதுகாக்க வேண்டு மென்றும், சாதாரண மக்கள் அதனைத் தொட்டுத் திட்டுப் படுத்திவிடக் கூட்ா தென்றும் அதன் புகழ் பாடிக்கொண்டிருங் தோம். இந்த முறையில் நம்முடைய நாட்டின் மெக்காடோவாக நம்முடைய பண்பாடு அமைந்துவிட்டது. ஆனல், அதே நேரத்தில் வெளிநாட்டுப் பண்பாடு, சுதந்திரத்தோடு சுற்றிவந்த காரணத்தால் ஷோஹ-னைப்போல ஆட்சிச் சிறப்புப் பெற்றுவந்தது. நம்முடைய மரியாதை யெல்லாம் ஒன்றுக்கும், ஆளுல், செலுத்தும் வரிகளை யெல்லாம் மற்ருென்றுக்குமாகச் செலுத்திவந்தோம். ஆட்சி செய்யும் அந்தப் பண்பாட்டை வெறுத்துத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு திட்டினுலும், அந்தப் பண்பாட்டிற்கு நாம் அடிமையாக இருக்கின்ற கிலேமையை எவ்வளவு வெறுத்து ஒதுக்கிலுைம், அதே நேரத்தில், நம்முடைய மனேவியின் ஆபரணங்களே விற்ருே அல்லது நம்முடைய பூர்வீகமான வீட்டை விற்ருே நம்முடைய பிள்ளைகளே இந்த வெளிநாட்டுப் பண்பாட்டின் தர்பாருக்கு அனுப்ப நாம் தவற நம்முடைய பண்பாட்டை இவ்வளவு மரியாதையுடன் பொன் விலங்கிட்டு வைத்திருப்பதால் பயன் ஒன்றுமில்லை. செயற்கை யான வேலிகள் எல்லாம் தகர்க்கப்படுகின்ற காலம் வந்துவிட்டது. எந்த ஒன்று அனைத் துலகப் பான்மையோடு அடிப்படையில் ஒற்றுமை கொண்டுள்ளதோ அதுவே நீலதது வாழ முடியும். தனித் திருக்கின்ற பொந்துக்குள் புகுந்து தன்னேத் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று கினைப்பது எதுவும் கிச்சயம் அழிக் து விடும். கைக் குழந்தையைத் தாங்கி யிருக்கின்ற தொட்டில், தனி யான ஓர் இடத்தில் பாதுகாவலாக இருக்கவேண்டும். ஆணுல், குழந்தை வளர்ந்து பெரியவனை பிறகும் இதே கிலேமை நீடிக்குமே யாளுல் அந்தப் பிள்ளே உடலாலும் மனத்தாலும் சோனியாகவே ஆகிவிடுவான். - 4. ."