பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$24, "ஆகட்டுங்க. இவுகளுக்கு எந்திருச்சதும் என்ன குடுக்கி றது? நொய்க் கஞ்சி காச்சி, பருப்புத் துவையல் அரைச்சுக் குடுக்கவா? எலுமிச்சங்காய் ஊறுகாயும் இருக்கு" என்ருள். "உன் பத்தியம்தான் கணக்கு ஆத்தா! " - தாங்காமல் சென்ற தந்தைக்கும் தங்க நின்ற மகளுக்கும் சாட்டையில்லாப் பம்பரமாக நிலவு துண இருந்து சுழன்று கொண்டு இருந்தது. சகுனி மாமா r ఇ" : 4 சிட்டை இல்லாப் பம்பரம் போல மாயப் பிரபஞ்ச இயங்கிக் கொண்டிருந்தது. ' , z - i விதியும் வினையும் கட்சிக்கு ஒன்முக நின்று கச்சை கட்டிக் "கிட்டிப்புள் விளையாடிக்கொண்டிருந்தன. х தன்னை மீறிய ஆணவச் சிரிப்பை அட்டகாசமாகக் கக்கிக் கொண்டிருந்தான் வீரமணி. வலது கை விச்சில் சுழன்றுகொண்ட டிருந்த கயிற்றேடு, தரையில் சுழன்று கொண்டிருந்த அந்தப் பம்பரத்தை இமை நோகப் பார்த்தான். வழுவழுப்பாக இருந்த முகம் பிரகாசம் அடைந்தது. "எப்பிடி என்ைேட ஆட்டம்?" என்று திமிர் கொழிக்கக் கேட்டான்.கோவைப் பழங்களாகச் சிவந்து கிடந்த விழிகளில் ஒரு "கிருது”-கர்வம் துவங்கியது. "அன்னச்சியோட ஆட்டத்துக்குச் சவால்போபஏலுமா?, சரி, எங்களுக்கு மிட்டாய் தாங்க!" என்று புதுப் புதுக் குர்: லாக எதிரொலிக்கத் தொடங்கின. சிருர்களுக்கு விடுமுறைக் கதவு திறந்து மூடியது. போதையின் கிறக்கம் வீரமணியின் மண்டைக்கு ஏறியது, ஒரு குட்டான் மிட்டாய்கள் காலியாயின. காலில் இடறிய சவுன் குக் கட்டையை எற்றிவிட்டான் ஆவாரம் பூக்கள் மஞ்சட் பொலிவூட்டிச் சிதறின.