பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 "மாப்பிள்ளிை, கண்ணுலத்தைச் செஞ்சு பார், வீட்டைக் கட்டிப் பார் லு ஒரு வாசகம் சொல்லுவாங்க. இந்த ரெண்டு காரியமுமே தலைக்கு ஒசந்த கஷ்ட சாத்தியமான காரியம். புதுசா ஆடு கட்டுதின்ன எப்பிடியும் ஒரு வருசம் ஆகிப்பிடும். ஆட்டிலேயா இருக்குது மனுசங்களோட் கவுரவமும் பெருமை பும்? அவங்கவங்க மனசிலேயும் மனசிலேருந்து வெளிப்படும் செய்கையும்தான் அவுங்கவுங்களுக்கு உண்டான மதிப்பும் பெருமையும் இருக்குதுங்க... இப்பைக்கு இருக்கிற பழைய விட் டைச் சீர்பண்ணுவோம். அதோட, எம்புட்டு வீடு கடலாட்டம் இருக்குது. வீட்டிலே போடுற பணத்தை மண்ணிலே போடுங்க. பொன்னுக்கித் தாரேன் நான்:. ஆமாங்க மாப் கபுத்திப்படியே ஆகட்டுங்க அம்மான்" அதாங்க வேணும். எதொண்ணையும் நீங்களே தன்னடச்ச முப்பாச் செய்யாம், என்னையும் ஒரு பேச்சுக்குக் கலந்து ஆலோ திச்சுக்கிங்க காசு பணத்தைக் கட்டுச் செட்டர்ச் செலவழிச்சாத் தான் நல்லது. மாப்புள்ளே! உங்ககிட்டே படிச்சுப் படிச்சுச் சொல்லிப்புட்டேன். சின்னச்சாமி அம்பலம் திருகுதாளப் பேர் வழி. அவன் சன்னுட்டம் கூடவேகூடாதுங்க. பூடகமாக இம் புட்டுத்தான் சாடை காட்ட ஏலும், இது கெட்டடய ஊரு. ஒருத்தன் பசையோட இருந்தா ரொம்பப் பேருக்குக் களிக்கும். ஏடாகூடமா ஏதானும் கெட்ட யோசனைங்களைச் சொல்லி மாட்டிவிடுவானுங்க. நல்லவங்க கம்மி, மாமனுக்கும் மாப்பிள் ளேக்கும் சிண்டு முடிஞ்சிவிடுவாங்க. அப்பனையும் மவனையும் மோதவிட்டு வேடிக்கை பாப்பானுங்க. வெள்ளையாய்ச் சொல் லப்போ ைபுருசனயும் பொண்டாட்டியையும்கூட ஒத்திருக்க விடமாட்டானுங்க! ..." தொண்டை வறண்டது. ஆளுலும் கூட, பேச்சை விடவில்லை. "தவிச்சவாய்க்குத் தண்ணி தராத பாவி அந்தச் சின்னச்சாமி. எச்சிக் கையினலே காக்கை விரட் 'டாத புண்ணியவான் அந்தப் படுபாவி. அவன்கிட்டே முழிச்சுக் கிட்டு இருங்க நீங்க... அவனும் அவன் சம்சாரமும் என்ன