பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ அடிநாள் தொட்டு ஒரு மாகை . அதுக்காகத்தான், நான் இங்கிட்டு கிறுக்குப் புடிச்சதாட்டம் வந்து குதிச்சிருக்கேன். இல்லாட்டி, எனக்குப் பொண்ணுக்கா பஞ்சம்?... என்னமோ ஒரு நேசம் அன்னத்து மேலே அதுக்கு நாணின்னக்க ஒரு பிரி யம்தான். சும்மாச் சொல்லப்புடாது! ... ஆளு. அந்தப் பொண்ணு அன்னம் எங்கண்ணு பார்க்க, அந்நியமான மாணிக் கத்தோட நெத்தியைத் தொட்டு ரத்தத்தைத் துடைக்கிறதா வது? இதை என்னுலே சகிக்கவே ஏலலையே! ... ஆமா, அன் னத்துக்கு ஒரு சூடு போட்டுக் காட்டினத்தான் எம் மனசு ஆறும்! ... ரைட்டு; அதுதான் சரி? ..." சிலட்டுருக்குப் போய்த் திரும்பினுல்தான் மனம் சமாதானம் அடையும் என்ற சிந்தையுடன் எதிரே நோக்கியபோது, அலங். கோலமாக நின்ற வில்வண்டி தெரிந்தது. மதியச் சாப்பாட்டை ஆவணத்தாங்கோட்டை சாலையில் முடித்துக்கொண்டு சிலப் டுருக்குப் பயணப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அத் தீர்மானத்துக்குப் பக்கபலமாக இந்த வில்வண்டியைப் பயன். படுத்திக்கொள்ளும் ஆலோசனையைத் தனக்குத் தானே. அங்.ே களித்துக்கொண்டான், வீரமணி. 'பச்சோந்தி ஒன்று அவன் காலடியில் பாய்ந்து ஒடியது. அவன் பயந்து நடுங்கிக் குதித்தான். பசி வயிற்றைக் கிள்ளி. யது. ஆகவே, அவன் வண்டியைப் பூட்டிக்கொண்டு கிளம்ப எண்ணி வீட்டைப் பூட்டினன். வில்வண்டியை நகர்த்தி வசம் பார்த்து வைத்துவிட்டு, வெள்ளைக் காளேகளை வால்ப் பிடித்து எழுப்பினன். காளைகளோ பின்னங் கால்களால் எட்டி உதை கொடுத்துத் திமிறின. இடது தொடையில் அடி விழுந்ததோடு தப்பிவிட்டான். ஆத்தாடி, தப்பிச்சேன்! இத்தி தப்பியிருந்தா, படாத இடத்திலே பட்டு இப்ப நானுமில்ல மாணிக்கம் மாதிரி. ஆசுப்பத்திரிக்குப் போயிருக்க வேணும்?. என்று எண்ணி ஆறுதல் அடைந்தான். அப்போது பொன்னத்தா அங்கு வந்தாள். - வீரமணி ஒரி அசட்டுச் சிரிப்பை உதடுகளின் மேல் ஓடி