பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

அன்னப் பறவைகள் மழைக் காலத்தில் தூக்கணாங் குருவிகள் பறந்து சென்று வசிக்கக்கூடிய ஒரு தூர தேசத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பதினொரு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் இருந்தனர். பதினொரு சகோதரர்களும் தங்கப் பலகைகளில் வயிர எழுதுகோல்களைக் கொண்டு எழுதிப் படித்து வந்தனர். அவர்கள் புத்தகங்கள் இல்லாமலே பாடங்களைப் படித்துச் சொல்லக்கூடிய வல்லவர்கள். ஆகவே அவர்கள் அரசகுமாரர்கள் என்பதைக் கேட்காமலே சொல்லி விடமுடியும். அவர்களுடைய தங்கை எழிலி ஒரு சிறு கண்ணாடி ஆசனத்தில் அமர்ந்து, படப்புத்தகம் ஒன்றைப் பார்த்துக்கொண்டேயிருப்பாள். அரசர் அவளுக்காகப் பாதி ராஜ்யத்தை விலையாகக் 1779-1 7179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/5&oldid=1542198" இலிருந்து மீள்விக்கப்பட்டது