பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73


கி.பி. 1885-ம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மனு போடுவதும், பிறகு 'காட் சேவ் தி கிங்’ என்ற தேசிய கீதம் பாடுவதே அரசியல் பணியாகக் கொண்டிருந்தது.

இந்த மிதவாத புத்தி, கோபால கிருஷ்ண கோகலே தலைவராக இருத்தவரை இருந்தது. திலகர் பெருமான் காங்கிரஸ் மகாசபையிலே காலெடுத்து வைத்த பிறகே, அதற்கு தன்மானம் பிறந்தது.

"சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என்ற மராட்டிய சிக்கக் கர்ஜனைக்குப் பிறகே, 'சுதந்திரம்' என்ற வார்த்த கனற்தெறிப்பாக பொறி பறந்தது.


விடுதலைப்போர் என்ற கரடுமுரடான வாகனப் பாதையிலே, காத்தியடிகன் தனது அகிம்சா அறப் போராட்டங்கள் நடத்திச் சிறை தண்டனைகனைப் பெற்று, 'சுதந்தரம்' என்ற உரிமை இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்று என்பதை ஆங்கில தர்பாருக்கே உணரவைத்தார்.

அன்றுவரை காங்கிரஸ் மகாசபை விடுதலை வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டதே தவிரத, 'கொடு' என்று தட்டிக் கேட்கவில்லை.

'இந்தியருக்கு நாட்டை ஆளும் அறிவும்- ஆற்றலும் இல்லை என்ற அடக்குமுறை ஆங்காரக் கூச்சவிட்ட போதுதான், அன்னி பெசண்ட் அம்மையார் இந்தியா வந்தார்!