26
அன்னை கஸ்தூரிபாயின்
உடனே கோபம் கொதித்து வந்த காந்தி மனைவியை உதைத்து, அறைந்து பரபரவென்று கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கதவைத் தாண்டிக் கொண்டு வந்து வெளியே தள்ளி விட எண்ணினார் கதவைத் திறந்தார்! பாவம் கஸ்தூரிபாய்! கண்களில் கண்ணிர் சிந்தியபடியே அழுது கொண்டு நின்று விட்டார்.
எங்கே போவார் கஸ்தூரி? கண்காணாத தென்னாப்பிரிக்காவில் யார் தயவுக்கு ஏங்குவார்? எவர் வீட்டுக்குப் போவார்? அப்படிப் போனால் கணவனுக்கு அல்லவா அவமானம்? என்றெல்லாம் எண்ணிக்கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நின்றுவிட்டார்.
"ஐயோ என்ன செய்வேன்! கோபத்தில் நான் அப்படி நடந்து கொண்டு விட்டேனே! இந்தியாவா இது? இங்கே யார் இருக்கிறார்கள் எனக்கு ஆதரவாக? எங்கே போவேன்?” என்று மீண்டும் அழுது கொண்டே இருந்தார் கஸ்தூரி
கோபம் கொந்தளித்த காந்தி, மனைவியின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கி சமாதானம் செய்தார்! ’சரி போ வீட்டிற்குள் என்று சொன்னார் பிறகு காந்தியே வெட்கப் பட்டு, கதவை மூடிக் கொண்டு ஆறுதல் கூறினார் மனைவிக்கு.
இந்த சம்பவத்தைப் பற்றி மேலும் விரிவாகக் காந்தி தனது சுய சரிதையில் எழுதும் போது, "என் மனைவி என்னை விட்டுப் பிரிய முடியாது என்றால், நானும் அவளை விட்டுப் பிரிய முடியாது. எங்களுக்குள் பலமுறை சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது உண்டு. ஆனால், முடிவு எப்போதும் சமாதானம் தான். ஒப்பற்ற பொறுமையாலும், எதையும் சகித்துக் கொள்ளும் தன்மையாலும், இறுதியிலே வெற்றி பெறுகிறவள் என் மனைவி கஸ்தூரி பாய்தான்”. என்று குறிப்பிடுகிறார்.