பக்கம்:அன்பின் உருவம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்து நில்லாக் கள்வன் ‘19

இருந்து மறைந்திருப்பான். உண்மையான அன்பு இல் லாதவர்கள் கரடியாகக் கத்திலுைம் வேறு எந்த வகையில் முயற்சி பண்ணிலுைம் அவனுடைய திருவருளேப் பெறு வது அரிது. எல்லாருக்கும் கள்வகை ஒளிந்து நிற்கின்ற வன் அவன். -

"அந்தக் கள்வனேயும் மயக்கக்கூடியவர்கள் அன்பர் கள். அவர்கள் எதைக் கேட்டாலும் அளிக்கிறவன். 'இவனே நாம் இடைவிடாமல் மலரால் அருச்சித்து எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான் என்று அன்பர்கள் அனுகுகிருர்கள்.' -: -

"அப்படி அவர்கள் எண்ணுகிறர்கள் என்பது அவனுக்குத் தெரியுமோ?" - • + . "கன்ருகத் தெரியும். அவர்களுடைய உள்ளத்தில் இருக்கிறவனுக்கு அது தெரியாதா? அங்கே அவன் கரந்து நிற்கமாட்டான். அவர்கள் இரப்பவற்றையும் கரவாமல் தந்தருள்வான்?"

'இறைவனிடம் அன்பு வைக்கிறவர்கள் இப்படி எண்ணலாமா?” .

'தாய் பல தின்பண்டங்களைப் பண்ணி வைத்திருக் கிருள். அவற்றைக் கண்டு குழந்தை ஆசைப்படுகிறது. நாம் செய்தவற்றைத் தின்ன இது ஆசைப்படுகிறதே என்று எந்தத் தாயாவது சினம் அடைவாளோ? அன்பர்கள் வேண்டியவற்றை இறைவன் கொடுக்கிறதில் வியப்பு ஒன்றும் இல்லே. அப்படிக் கொடுக்கின்ற வள்ளலையன்றி வேறு யாரைப்போய் இறைஞ்சுவது?" என்று பக்தர் கூறி முடித்தார். *ść” .

பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட்

டாது அடி யே இறைஞ்சி இரந்தனல் லாம்எமக் கேபெற

லாம்எனும் அன்பர் உள்ளம் கரந்துதில் லாக்கள்வனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/25&oldid=535447" இலிருந்து மீள்விக்கப்பட்டது