பக்கம்:அன்பின் உருவம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்து நில்லாக் கள்வன் - 있

இறைவனுடைய திருவடியில் முறுகிய அன்பு தோன்றி விட்டால் அப்புறம் கேட்பன எல்லாம் பலிக்கும். வண் டியிலே ஏறின. பிறகுதான், 'ஒருமணி நேரம் போளுேம், பத்து மைல் கடந்துவிட்டோம்” என்று சொல்ல முடியும். வண்டியில் எருமல் கீழே நின்றுகொண்டு ஒரு மணி கழித்துப் பார்த்தால், 'அடடா இருக்கிற இடத்தி லேயே இருக்கிருேமே” என்றுதான் சொல்லும்படி இருக்கும். இறைவனுடைய அன்பு வண்டியில் ஏறின பிற்பாடுதான் நாம் எது கேட்டாலும் கிடைக்குமே அன்றி அதற்கு முன்னல் கேட்பன எல்லாம் கிடையா.

இதில் மற்ருேர் அதிசயம்: வண்டியிலே ஏறின. பிறகு அவன் கேட்கிற கேள்வியே வேறு விதமாகப் போய்விடும்; அவனுடைய ஆசையே மாறிவிடும். உலகில் இருக்கின்ற மக்கள் எல்லாவற்றையும் கேட்பார்கள். அவர்கள் உள் ளம் ஆசை நிரம்பியது. அன்பர்களோ எல்லாவற்றையும் கேட்பதில்லை. பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கைக்கு வேண்டியவை இவை என்று எண்ணிக் கவலையடைவதோ கேட்டதோ இல்லை. 'இறைவனே நமக்கு வேண்டிய வற்றைத் தருவானே. குறிப்பறிந்து தருகின்ற கொடை யாளியாகிய அவனிடத்தில் இன்னது வேண்டும் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்" என்றுதான் கினைப் பார்கள். - - ஒருகால் அவர்கள் ஏதேனும் கேட்டுவிட்டால் அது மிகச் சிறியதாகத்தான் இருக்கும். எல்லா ஐசுவரியங் களையும் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தந்து காப் பாற்றுகின்ற பேரருளாளனுகிய ஆண்டவன் பக்தர்கள் கேட்கின்ற சிறிய பொருளேத் தராமலா போவான்? -

'இரத்த எல்லாம் கொடுக்கிருன்" என்று சொன்னல், 'கேளாததைக் கேட்பார்கள். இறைவனலே கொடுக்க முடியாததைக் கேட்பார்கள். அப்போது என்ன செய்வது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/27&oldid=535449" இலிருந்து மீள்விக்கப்பட்டது