பக்கம்:அன்பின் உருவம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அன்பின் உருவம்

காக, பாண்டியன் அரசாட்சிக்காகச் சிந்தனே செய்தார். இறைவனுடைய திருவருளுக்கு ஆளான பிறகு, முன்பு சிதறுண்ட சிந்தனைகளெல்லாம் கின்றன. ஆளுல் சிந்தனை முற்றும் அழியவில்லை. இந்த உடம்பு இருக்கும் மட்டும் சிந்தனை ஓயாது. பேச்சு ஓயாது; பார்வை வில்லாது. சிந்தனே யைச் சிந்தனையின் போக்கிலேயே விட்டு விட்டால் பிறந்த தளுல் ஆகும் பயன் நமக்குக் கிடைக்காது. இறைவனுடைய திருவருள் அந்தச் சிந்தனையை மாற்றியது; வாக்கை மாற்றி யது; பார்வையை மாற்றியது. இதைச் சொல்ல வருகிருர் மாணிக்கவாசகர்.

அவர் சிந்தனே இயங்கிக்கொண்டேதான் இருந்தது இயங்குகின்ற சிந்தனையைத் திடீரென்று நிறுத்திவிட்டால் இந்த உடம்பே மாய்ந்துவிடும். ஆகவே அந்தச் சிந்தனையை நிறுத்தவில்லை. குழந்தை ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தால் அதைச் செய்யாதே என்று சொன்னுல் அது மேலும் செய்துகொண்டுதான் இருக்கும். அப்படி இன்றி அந்தக் குழந்தைக்கு வேறு வேலே கொடுத்துவிட் டால் அது முன்னலே செய்த வேலையைச் செய்யாது. இறைவன் அப்படிச் செய்தாளும்.

மணிவாசகர் தாமாக இறைவனே நினைக்கவில்லையாம். அவனுடைய திருவருள்தான் அவனே கினைக்கப் பண்ணிய தாம். "அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று வேறு ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிருர். அவருடைய சிந்தனையை ஆண்டவன் தனக்கென்று ஆக்கிக்கொண் டாளும். இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டவர். களுக்கு அவர்கள் சினேப்பது. பேசுவது ஆகிய எல்லாமே அவன் மயமாக இருக்கும். எப்படியாவது அவைேடு தொடர்புடைய பொருளேயே சிந்திப்பதும் அதைப்பற்றியே பேச்வதுமாக இருப்பார்கள். 'என்னுடைய சிந்தனைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/42&oldid=535464" இலிருந்து மீள்விக்கப்பட்டது