பக்கம்:அன்பின் உருவம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒான நாடகம் 67

இப்போது அவனருளிலே கரைந்து இன்புறுவதுமாகிய இரண்டுமே இறைவன் அருளாணேயின் வழியே நடந்தவை என்பதை இப்போது உணர்ந்திருக்கிருர். பழைய நிலை ஒன்று; இப்போதுள்ள கிலே ஒன்று; அந்த கிலேயினின்று இந்த நிலைக்கு வந்தபோது இருந்த நிலை ஒன்று. துன்பம் கிறைந்த தென்கரையில் இருந்தார். பிறகு ஒடத்தில் ஏறி ஆற்றைக் கடந்தார். இப்போது இன்பம் கிறைந்த வட கரையில் நிற்கிருர் இந்த மூன்று நிலைகளையும் பற்றி இப்போது கினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியத்தின்மேல் ஆச்சரியமாக இருக்கிறது. . -

முதலில் இருந்த கிலே என்ன? அதை ஊனின் நாடகம் என்று சொல்கிருர். இந்த உடம்பு எப்படி எல்லாமோ கூத்தாடியது. அக்காலத்தில் செய்த காரியங்கள் யாவும் ஊனே வளர்க்கச் செய்தவையே. சோற்றை எடுத்து வாயில் போட்டுக்கொள்வதுதான் ஊனே வளர்க்கச் செய் யும் செயல் என்று நாம் கினைக்கிருேம். அந்தச் சோற்றைச் சமைக்க அரிசி வாங்கி வருகிருேம்; அதுவும் உடம்பை வளர்க்கச் செய்வதுதான். அரிசி வாங்குவதற்காகப் பணம் சம்பாதிக்கிருேம், அதுவும் ஊனுக்காக ஆடும் நாடகக் தான். பணம் சம்பாதிப்பதற்காகப் பலரிடம் போய் அவர்கள் புகழைப் பாடுகிருேம்; அதுவும் ஊன நாடகக் தான். பின்னலே கமக்கு நிறையப் பணம் வருமென்று. இப்போது பணத்தைச் செலவழிக்கிருேம்; அந்தச் செய லும் உடம்புக்காக ஆடும் கூத்துத்தான். -

போற்றியோ போற்றியோ என்று புதுச்செல்வம்

தோற்றியார் கண்னல்லாம் தொண்டேபோல்-ஆற்றப் பயிற்றிப் பயிற்றிப் பலஉரைப்ப தெல்லாம் . வயிற்றுப் பெருமான் பொருட்டு" என்பது ஒரு பழம்பாட்டு. இறைவன் திருவருளே கினையா மல் உலகியலிலே எத்தனே வகை முயற்சிகள் செய்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/73&oldid=535495" இலிருந்து மீள்விக்கப்பட்டது