பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9



மாமன் மகளை அழைத்தான், மேகலை உண்டாக்கிய


j~


பண்ணை முன்னோட விட்டு, பின் தொடர்ந்து மறுகி மறு கி வந்தாள் மேகலை,


சாதாரணமாக அழகான ஒர் உருவத்திற்கு வரம்பு காட் டி, வடிவு சொல்லி விளக்கம் தரும்போது சித்திரத் தில் எழுதித் தான் அந்த அழகைப் பார்க்க வேண்டும்’ என் பார்கள். மேகலையின் அழகை எழுதிப் பார்க்க மாமல்லன் சித்திரக் காரன் அல்ல. அவ்வாறு புதிய பதவி ஏற்கவும் தயாராகவில்லை, ஏற்கவும் மாட்டான். ஏனென்றால், அவன் என்றால் அவள் தான், அவள் என்றால் அவன் தான். மேகலை மாமல்லன் கதை நூதன மானது. விட்ட குறை-தொட்ட குறையின் கணக்குப் பார்த்து, மு:மை வினைப்பயன் தெரிவித்த ஐந்தொகையை ஆராய்ந்து, பூஜா பலன்களின் புள்ளி வி வ ர ங் ைள நிர்ணயம் செய்து, முடிவுக்கு முத்தாய்ப்பீட்டு, மாயனார் குயவன் செய்யும் உயிர் நிறைய மண் பாண்டங்கள் எத்தனை எத்தனையோ ஒட்டை உடைசல்களாக உரு மாறி, உருவழிந்து போய் விடுவது உண்டு. ஆனால், இந்த இணையைப் பொருத்த மட்டிலே நான்முகன் நல்லவனாகவே அமைந்திருந்தான். அழகுக்குப் பினை யென அழகையே உண்டாக்கியிருந்தான். மேகலைக்கு ஏற்றவன் மாமல்லன்!


கோசலை அம்மாள் பால் கொணர்ந்து கொடுத்தாள். மாமல்லன் அருந்தினான். மகனுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தாள். அன்னை கீழே சென்றாள். அவன் மற்ற விளக்குகளை அணைத்தான். மேஜை விளக்கின் மங்கலான ஒளியில், அம்மாதத்தின் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றைப் புரட்டினான். கடிதம் ஒன்று இருந்தது. பதட்டம் உச்சிக்கு ஏறியது, பார்வை துண்டுக் காகிதத்துக்குத் துள்ளியோடியது.