பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுங்கியது. பெட்டியைத் துழாவின. ஒரு கடிதக் பிணைத்திருந்த வாழை


ந அதுத் கடிதங்கள் உதிர்ந்த கண்கள் சேகரித்து வைத்திருந்த தாபத்திற்குச் சாட்சி கூற கண்ணிர் முத்துக்கள் ஒவ் வொன்றாக அணி வகுத்துப் புறப்படலாயின. அத்தான். அத்தான் ‘ என்ற உறவுச்சொல் ஒலிக்கத் தொடங்கியது, ஒன்றிரண்டு தபால்களைப் புரட்டினாள் சிந்தாமணி.


சிந்தாமணி”


அத்தான் நான் அழைக்கிறேன். அத்தை மகள் நீ பதில் சொல்லமாட்டாயா ?


நீ எங்கோ இருக்கிற ய், நான் எங்கோ இருக்கிறேன். ஆனாலும் நம் ஆசை கங்கள் இரண்டும் அருகிருந்து, அன்பு சேர்த்து ஆறுதல் மொழி சொல்லிக் கொள் கின்றனவே இந்தக் காட்சியை நான் உணர்கிறேன். உனக்கும் தெரிந்திருக்க வேண்டுமே இந்த இன்ப நிலை ஒன்று போதுமே, ஏழேழு பிறப்புக்கும் நம் பிணைப்புக் கயிறு அறுபடாமல் இருக்க !


சின்னக் கரித்துண்டு என் விர விடுக்கில் அகப்பட்டுக் கொள்ளும்போது, உன்னை நான் படைக்கிறேன். பார்க் கின்றேன். பரவசமடைகிறேன். விளங்குகின்ற உ ற வு முறையும், விளங்காத பாச பந்தமும் என்னை உன்பால் பைத்தியமாக்குகின்றன. பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறானாம் அய்யன். நான் கண்டது கிடையாது. காணவேண்டுமென்று எண்ணியதும் கிடையாது, ஆனால் நான் காணும் திசையெல்லாம் கடவுளைக் காணா விட்டாலும்-அல்லது காண முடியாவிட்டாலும், அரம் பையரை மிஞ்சும் பூவையரைக் காணத் தவறுவதில்லை. ஒர் அதிசயம் என்ன தெரியுமா ? ம், சொல், சிந்தாமணி சொல் சரி, நானேதான் சொல்லி விடுகிறேனே ! தோன்றும் பெண்களிலே-தோற்றம் தரும் விழிக் கணை