பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ந்துரை


ម្ដុំគ្ន ក្ងាចិត្ត


தலைவர், தமிழகத் தமிழாசிரியர் கழகம் : சைதை வட்டம், சென்னை-6!


‘அன்புத்தாய் மேகலை’ என்னும் அருமையான


நாவலை முதலிலிருந்து கடைசிவரை முதலில் படிக்கும் பேறு எனக்குக் கிடைத்ததில் பெருமகிழ்வெய்துகின்றேன்


மாமல்லனைத் தலைவனாகக் கொண்டு எழுதிய நூல் மக்கள் மனத்தில் நிலையான இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. மாமல்லன் சிரித்தான் என்பதை ஆசிரியர் நுணுக்கமாக


‘திரிபுரம் எரித்த பின்னர்தான் விரிசடைக் கடவுள் சிரித்தானாம் ஆனால் இதோ, அந்த ஈசனையும் தோற்கடிக்கச் செய்து விட்டவனைப்போல மாமல்லன் அடடகாசமாகச் சிரிககின்றானே, ஏன் ? இவன் எதை எரித்தான்? யாரை எரித்தான்’... என்று எழுதியுள்ள திறம் பாராட்டத் தக்கது ஆகும்,


நாவலின் இடை இடையே பல இலக்கியச் சிந்தனை களை விருந்தாகப் படைத்துள்ளார். ஸிக்மெண்ட் பிராய்ட் வில்ஹம் விண்டட், பிரான்ஸிஸ் கால்ட்டன், போன்ற உளநூல் வல்லுநர்களையும் குறிப்பிட்டுள்ளார்.


பெண்களைப் பற்றி ஆசிரியர் நன்கு சிந்தித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார். பாத்திரங்களைப் படைக்கும் பொழுதே சிறந்த ஆசிரியர்கள் தன் மனக் கருத்தையும் கூறுவார்கள். அதுபோன்றே இந்நாவலில்


“பெண்களின் மன ஆழத்தை ஆண்கள் கண்டறிய முடியாது என்பார்கள். ஆனால் ஆண்களின் மன ரகசியங் களையும சேர்த்து அறிந்து கொள்ளும் சாகஸம் இந்தப் பெண்களுக்குத் தலைகீழ்ப்பாடம் போலிருக்கிறது’ (பக்கம்.38) என்று பெண்களின் மன ஆற்றல்ை வெளிப் படுத்துகிறார்.


1. மனத்துக்கு மனம் சாட்சி


மற்றதுககுத் தெய்வம் சாட்சி’ பக்கம் 75 2 ‘அள்ளாம குறையாது


சொல்லாம பொறக்காது” பக்கம் i06