பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రీ


நிலவினில் நினை மருவி வள்ளி, வள்ளி ! நீயாகிடவே வந்தேன் !’


“ராஜா சிதம்பரம் பூங்கா என்பதாக ஒன்று அரியலூரில் இருப்பதாகக்கூட அவ்வூர் வாசிகளில் பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டார்கள் சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், ஜெயங்கொண்டம், கும்பகோணம், திருச்சி கடலூர்-இவை போன்ற ஊர்களுக்குப் பயணப்படுகிறவர் களுக்கும், நேர் எதிரே தண்ணிர் எடுக்க வரும் பெண் குலத்தினருக்கும் இதயத்தை வாசற்படியில் நிறுத்திவிட்டு, நீதி கோரி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் செல்வர்களுக் கும், பள்ளிப் பிள்ளைகளுக்கும் அந்தச் சிருங்காரப் பூந் தோட்டம் பெரும்பகுதி அறிமுகமாகியிருக்கத்தான் வேண்டும்.


இத்தகைய தன்மையில் இருந்த மேற்படி பூங்காவில் அன்றைக்குத் தனிக்களை சொட்டியது. கடலலைகளுக்கு அடியிலும், மலை முகடுகளுக்குப் பின்னாலும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டிய வெய்யவன் அப்போது செயல் மறந்திருந்தான். இயற்கையின் நியதிக் குறிப்புக்கு ஒத்துப் போகும் மலர் வகைகள் சிறை வைத்திருந்த மணத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தன அருகிருந்த ஹோட்டலில் வாய்வலிக்கக் கதறிய ரேடியோ தமிழகத்தி லிருந்து கடன் வாங்கிய திரைப் பாடல்களை சிங்களத் தீவிலிருந்து ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.


இன்பம் நிறைந்த இத்தகைய சுற்றுணர்ச்சியின் மத்தி யில், துன்பம் சேர்ந்த இதயங்கள் இரண்டு சோர்ந்து