பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அன்பு அலறுகிறது உன்னைப் பார்க்காமலேயே, கன்ருக இருக்கிறது!’ என்று நான் சொல்லவில்லையா? அதற்கு அவர் 6. ஆளைப் பார்க்காமலேயே அபிப்பிராயம் தெரிவிக்கிறீர் களே?’ என்று சிரித்துவிட்டு உன்னே எனக்கு முன்னுல் நிறுத்தி உன் அழகை வருணிக்கவில்லையா?” உைண்மைதான் - ஆல்ை, நீங்கள் கினைப்பது போல் பெண் என்பவள் உடல் இச்சைக்காக மட்டும் உயிர் வாழ்பவள் அல்ல; அவளுக்கும் உள்ளம் உண்டு; உறுதி உண்டு; மானம் உண்டு; மரியாதையும் உண்டு!”

  • உன் கணவல்ை உனக்கு எந்த இன்பமும் இல்லாமற் போன பிறகு எது இருந்து என்ன பிரயோசனம், லலிதா?”

என் கணவனல் எனக்கு எந்த இன்பமும் இல்லை யென்று முடிவு செய்ய நீங்கள் யார்?’’

அந்த முடிவை நானும் செய்ய வில்லை; உன் கணவரும் செய்யவில்லை. உன் மேல் காங்கள் கொண்ட அன்பு செய்தது லலிதா அன்பு செய்தது!’

ஐையோ, என்னை அவமதிப்பதெல்லாம் போதா தென்று அன்பையும் ஏன் அவமதிக்கிறீர்கள்?’’ எதமிழ்காட்டுப் பெண்களின் முன்னேற்றத்துக் காக லலிதா தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத் துக்காக!”

முன்னேற்றத்தைத்தான் ஏற்கனவே எத்தனை யோ வழுக்கி விழுந்தவர்கள் தமிழ்நாட்டில் அடைந்து கொண்டிருக்கிருர்களே, அவர்களை வேண்டுமானுல் உங்களால் முன்னேறியவர்கள் என்று நீங்கள்