இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பு மாலை
23
திண்ணெனும் நெஞ்ச மாயைத்
திரையெலாம் போக்கும் ஐயன்;
துண்ணென அஞ்சான்; ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!
36
இனிமையுற் றார்கள் எல்லாம்
இவன்பக்கல் வந்தே நிற்பார்;
கனிவுறு நெஞ்சர் இங்கே
காண்பதே இன்பம்; என்றும்
தனிமையும் கூட்டந் தானும்
சமமென நிற்கும் ஐயன்;
துனிதவிர்க் கின்ற ராம
சுரத்குமார் இணைத்தாள் போற்றி!
37
துனி - வெறுப்பு.
வாயினால் பேசும் சொற்கள்,
மனத்தினால் எண்ணும் எண்ணம்,
தோய்வுறு தேகத் தாலே
சுலவிய செய்கை யெல்லாம்
நாயகன் தன்பால் வைக்கும்
நன்னெறி காட்டும் ஆசான்,
தூயவ னாகும் ராம
சுரத்குமார் துணைத்தாள் போற்றி!
38
சுலவிய - செய்த.
கலைகளின் பொருளாய் நிற்கும்
கருத்தெது? பிரமந் தன்னை
அலைவிலா நெஞ்சத் துள்ளே
அனுதினம் அமைத்துப் போற்றி