பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அன்பு வாழ்க்கை

இப்போது தோழர் கிருஷ்ணன் அவர்களுக்கும் தோழியர் துளசிபாய் அம்மையாருக்கும் சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெற்றது. இப்படிப்பட்ட சீர்திருத்த முறையில் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் இப்போதெல்லாம் மக்களிடம் அதிக அக்கறை காணப்பட்டு வருகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட திருமணங்கள் நடைபெறுவதற்கு எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்தன. இன்று அப்படி பட்ட எதிர்ப்புகள் இல்லை. அப்போது எதிர்ப்புகளும் ஏராளம். இப்படிப்பட்ட திருமணங்களுக்கு இப்போது எதிர்ப்புகள் குறைந்துள்ளன. அதனால் ஏராளமான சீர்திருத்தத திருமணங்கள் மிகவும் தாராளமாக நடைபெறுகின்றன. என்றாலும், எதிர்ப்புகள் அடியோடு இல்லவே இல்லை என்று கூற முடியாதே!

எவ்வளவுதான் அதிகமான சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தபோதிலும், அவற்றைப்பற்றிய சந்தேகங்கள் மக்களுக்கு இன்னமும் அடியோடு நீங்கிவிட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? இல்லையே!